அன்று.. தவறை தட்டி கேட்ட போலீஸ் அதிகாரி; இன்று.. தவறை சுட்டிக்காட்டும் ஆசிரியை!
ஐ.பி.எஸ். அதிகாரி
உயர்நிலைப்பள்ளி
இந்தநிலையில் ஓய்வு பெற்ற சீமா அகர்வால், தனது சமூக பணிக்கு ஓய்வு கொடுக்காமல், சென்னை தேனாம்பேட்டையில் எல்டாம்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 6, 7-ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணித பாடம் நடத்துகிறார். இதற்காக அவர் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்ததில் மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அவர் தனது ஆசிரியை பணியை தொடங்கியுள்ளார். காலையில் தலா 40 நிமிடம் என 2 பாட வேளையை நடத்தி வருகிறார்.
ஒரு அம்மாவாக...
இதுகுறித்து சீமா அகர்வால் 'தினத்தந்தி' நிருபரிடம் கூறுகையில், "பணி ஓய்வு பெற்ற பின் ஏழை மாணவர்களுக்காக சிறு சேவையாக இதனை செய்கிறேன். 'கற்றலில் மகிழ்ச்சி' என்பதில் மாணவர்கள் எளிதில் புரிந்து படிக்கும் வகையில் ஆங்கிலம், கணித பாடங்களை நடத்துகிறேன்.
மாணவர்களுக்கு வீட்டில் சொல்லிக்கொடுப்பதற்கு சில நேரங்களில் பெற்றோரால் முடியாது. அதனால் என்னால் முடிந்த சிறு உதவியாக ஒரு அம்மாவாக இருந்து செயல்படலாம் என நினைத்து இதனை நடத்தி வருகிறேன்" என்றார்.
மாணவர்கள் நெகிழ்ச்சி