📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health May 25, 2026 03:00 AM

தாயும் மகளும்: கூட்டு வணிகத்தில் வெற்றிக் கதைகள்

தாயும் மகளும்: கூட்டு வணிகத்தில் வெற்றிக் கதைகள்

தாயின் நினைவாக, சின்னம்மாவின் துணையோடு</p> <p class="mb-4 leading-relaxed">இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் காலமானதை நினைவுகூர்ந்தார் ஜே.கே.சரவணா, 44. அப்போது அவருக்கு 21 வயது மட்டும்தான்.</p> <p class="mb-4 leading-relaxed">“அம்மாவை இழந்த நாளிலிருந்து அவருடைய தங்கைதான் என்னை தாய்ப் போல வளர்த்தார்,” என்று அவர் தெரிவித்தார்.</p> <p class="mb-4 leading-relaxed">திரு சரவணாவையும் அவரது சின்னமாவையும் ஒன்றிணைத்த ஒரு பொதுவான காரணி உணவு. இருவரும் அதீத உணவுப் பிரியர்கள்.</p> <p class="mb-4 leading-relaxed">விருந்தோம்பல் துறையில் சின்னம்மா ஷாமினி சுப்பையா, ஊடகத் துறையில் இருக்கும் திரு சரவணா மற்றும் உணவு மீதான காதலும் இணைந்து பிறந்தது ‘அம்மகாசே’ உயர்தர இந்திய உணவகம்.</p> <p class="mb-4 leading-relaxed">‘நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்’ என்று பொருள்படும் ‘ஒமகாசே’ என்ற ஒரு ஜப்பானிய உணவு உண்ணும் பாணியைத் தழுவி இந்தியா, இலங்கையின் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த, ஒரு தாயின் கைப்பக்குவம் கொண்ட உணவு அனுபவங்களை அளிக்கிறது ‘அம்மகாசே’.</p> <p class="mb-4 leading-relaxed">“ஒவ்வோர் ஆண்டும் ‘அம்மகாசே’ அன்னையர் தினத்தன்று தனது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது,” என்று அதன் மற்றொரு சிறப்பம்சத்தைக் குறிப்பிட்டார் அவர்.</p> <p class="mb-4 leading-relaxed">‘அம்மகாசே’ உணவகத்தின் தூதராகவும் பணிபுரியும் திருவாட்டி ஷாமினி, உணவுபானத் துறையில் பல்லாண்டு அனுபவம் மிகுந்தவர். அவர் உணவகத்தை நடத்தும் நுணுக்கங்களைத் தலைமைச் செயல் அதிகாரியான திரு சரவணாவுக்குக் கற்றுக் கொடுத்தார்.</p> <p class="mb-4 leading-relaxed">“தொழில்ரீதியாக மக்களுடன் பழகும் திறனை சின்னம்மா எனக்குக் கற்றுக் கொடுத்தார். அவர் வழி, நான் மக்களிடத்தில் உருவாகும் பிணைப்புகள், அவர்களுடன் பழகும் திறனைப் பற்றி நன்கு அறிந்துகொண்டேன்,” என்றார் அவர்.</p> <p class="mb-4 leading-relaxed">ஆண்டின் இரண்டாம் பாதியில் ‘அம்மகாசே’ நிறுவனம் சென்னை மற்றும் துபாய்க்கு விரிவடைகிறது. இதுபோன்ற தொழில் சார்ந்த முடிவுகளுக்குத் தேவைப்படும் கலந்துரையாடல்கள் அவருக்கும் சின்னமாவுக்கும் இடையே மிக ஆரோக்கியமானவை என்று திரு சரவணா பகிர்ந்தார்.</p> <p class="mb-4 leading-relaxed">“செய்யும் தவறுகள், அவற்றிலிருந்து பிறக்கும் கற்றலுக்கு சின்னம்மா தொடர்ந்து எனக்கு இடமளித்தார். தாயும் மகனுமாக இருப்பதைவிட, எங்கள் உறவு உயிர் தோழர்கள் போன்றது,” என்று மனம் நெகிழத் தெரிவித்தார் திரு சரவணா.</p> <p class="mb-4 leading-relaxed">தலைமுறை இடைவெளியைத் தகர்த்திய தாயும் மகளும்</p> <p class="mb-4 leading-relaxed">சிறு வயதிலிருந்து தையல் கலையில் ஆர்வம் கொண்டிருந்த ​​பிரேமா கேலு, 69, பெருந்தொற்றுக் காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முகக் கவசங்களைத் தைத்து வந்தார்.</p> <p class="mb-4 leading-relaxed">அம்மாவின் அந்தச் செயலைக் கூர்ந்து கவனித்த மகள் ஐஸ்வரியா வடிவேலு, 27, இதை ஏன் ஒரு தொழிலாக மாற்றக்கூடாது என்று யோசித்தார்.</p> <p class="mb-4 leading-relaxed">அந்த யோசனையிலிருந்து 2021ஆம் ஆண்டு பிறந்தது ‘பாப்ஸ் டெய்லரிங்’ எனும் தையல் சிறுவணிகம்.</p> <p class="mb-4 leading-relaxed">தையல் கலையில் அம்மா புதிய நுட்பங்களைக் கற்று எதிர்பார்ப்புகளையும் தாண்டி சிறப்பாகச் செயல்படுவதைக் கவனித்துள்ளதாகத் தெரிவித்தார் ஐஸ்வரியா.</p> <p class="mb-4 leading-relaxed">“அவருக்குச் சமூக ஊடகங்களைப் பற்றி அவ்வளவாகத் தெரியாததால் நான் உதவ முன்வந்தேன்,” என்று தன் பங்கைப் பற்றி அவர் விவரித்தார்.</p> <p class="mb-4 leading-relaxed">பாரம்பரிய பரதநாட்டிய கலைஞருமான ஐஸ்வரியாவுக்கு ஆடைகளையும் தயாரித்துள்ளார் திருவாட்டி பிரேமா.</p> <p class="mb-4 leading-relaxed">“நமக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஓர் ஆடையை வைத்திருப்பது எவ்வளவு சிறப்பு என்பதைத் தன் கைவண்ணம் வழி அம்மா எனக்கு உணர்த்தினார்,” என்றார் அவர்.</p> <p class="mb-4 leading-relaxed">திருவாட்டி பிரேமா தையல் பணிகளைக் கையாள, ஐஸ்வரியா சமூக ஊடகச் சந்தா, நிர்வாகப் பொறுப்புகளை மேற்பார்வையிடுகிறார். அதனால், திருவாட்டி பிரேமா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பற்றி அதிகம் கவலைப்படவேண்டியதில்லை என்றும் பகிர்ந்தார் ஐஸ்வரியா.</p> <p class="mb-4 leading-relaxed">அம்மா-மகள் இணையும் எந்தவொரு வணிகத்திலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு.</p> <p class="mb-4 leading-relaxed">“பொதுவாக வியாபாரமும் குடும்பமும் தனித்தனியாக இருப்பதால் வியாபாரத்தில் ஏற்படும் நமது கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் குடும்ப விவகாரங்களை எட்டுவதில்லை,” என்றும் தெரிவித்தார் ஐஸ்வரியா.</p> <p class="mb-4 leading-relaxed">இரண்டு தலைமுறைகளிடையே இடைவெளி இருக்கிறது. எப்படியோ அதை அவர்களுக்கு சாதகமாக திருவாட்டி பிரேமாவும் ஐஸ்வர்யாவும் பயன்படுத்திக்கொண்டனர்.</p> <p class="mb-4 leading-relaxed">“தற்போதைய காலகட்டத்திற்கு எது பொருந்தும் என்று நான் என் அம்மாவிடம் சொல்வேன். அவரும் தன் ஆற்றலைப் பயன்படுத்தி ஆடைகளை உருவாக்குவார்,” என்றார் ஐஸ்வரியா.</p> <p class="mb-4 leading-relaxed">வேற்றுமைகளைத் தாண்டி இரு தலைமுறைகளுக்கிடையே வளரும் கற்றல் தொடர்ந்து இருந்து வருவதால் அம்மாவுடன் இருக்கும் உறவு வலுப்படுகிறது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ஐஸ்வரியா.