📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 25, 2026 05:34 AM

சோழவந்தான்: பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, விவசாயிகள் கையில் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தவெ

சோழவந்தான்: பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, விவசாயிகள் கையில் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தவெ

சோழவந்தான்: பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி, விவசாயிகள் கையில் தட்டு ஏந்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தவெக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி பயனில்லாதது; தேர்தல் வாக்குறுதிப்படி தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை கூட்டுறவு கடன் சங்கம் முன் பயிர்க்கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்யக்கோரி, இன்று காலை கையில் தட்டு ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயிகளின் அனைத்து கடன்கள் மற்றும் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் ‘தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி சலுகைகள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை. எங்கள் கிராமம் விவசாயத்தை சார்ந்து வாழும் பகுதியாகும். இப்பகுதி விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் பெற்றுள்ளனர். ஆனால், தள்ளுபடி சலுகைகள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கவில்லை. எனவே, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக தாலுகா அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.