சூடுபிடித்தது பழநி கோவில் நில மோசடி வழக்கு; சார்பதிவாளரிடம் தீவிர விசாரணை
நமது நிருபர்
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் பூங்கா சாலையில், தண்டபாணி சுவாமி மடம் உள்ளது. இம்மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1.40 ஏக்கர் நிலத்தை மோசடியாக திருப்பூர் மாவட்டம், உடுமலை பாப்பான்குளம் வெள்ளத்துரை, பழனி ஆயக்குடி டி.கே.என்.புதுார் சேதுபதி ஆகிய இருவருக்கு ஜூலை 6ல், 2 கோடி ரூபாய்க்கு கிரயமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
பழநி அடிவாரம் போலீசார் விசாரித்த இவ்வழக்கு, டி.ஜி.பி., உத்தரவில் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., சஜிதா தலைமையில் டி.எஸ்.பி., அஜய்தங்கம் மேற்பார்வையில், 5 இன்ஸ்., உள்ளிட்ட போலீசார் இவ்வழக்கை விசாரிக்கின்றனர். திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்தானலட்சுமி உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.
முக்கிய ஆவணங்கள்
சிறப்பு வீடியோ!
பழநி நில மோசடி வழக்கு விசாரணை வேகம் பெறுகிறது; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்