📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 30, 2026 09:34 AM

"என்னைப் பார்த்துதான் மக்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர்"

"என்னைப் பார்த்துதான் மக்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர்"

சென்னையில் நடைபெற்ற 'பள்ளி எழுச்சி பாவை பாடல்கள்' ஆல்பம் வெளியீட்டு விழாவில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், திருவண்ணாமலையுடன் தனக்கு ஏற்பட்ட ஆன்மிக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

கிரிவலம் என் வழக்கமாக இருந்தது

இளையராஜா பேசுகையில், "திருவண்ணாமலையில் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வதை நான் வழக்கமாகக் கொண்டிருந்தேன். நான் மலை சுற்றுவதை பார்த்த பிறகே, பலரும் அந்த வழக்கத்தை பின்பற்றத் தொடங்கினர் என்று அங்குள்ள அடியார்கள் கூறுவார்கள்," என்றார்.

லிங்கத்தை தரிசிக்கும்போது அதிர்வலை

மேலும் அவர் கூறுகையில், "கிரிவலப் பாதையில் உள்ள லிங்கங்களை தரிசிக்கும்போது ஒரு தெய்வீக அதிர்வலையை உணர முடியும். குறிப்பாக, அந்த லிங்கம் ஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்களை கேட்ட புனிதத் தலம் என்பதை நினைக்கும் போதே, என் உடல் முழுவதும் புல்லரித்தது. குருக்கள் காட்டிய கற்பூர ஆராதனையை தரிசித்து வெளியே நடந்து வந்தபோதும், அந்த அதிர்வலை என் கால்களில் உணரப்பட்டது. வீட்டிற்கு வந்த பிறகும் அந்த அனுபவம் மனதில் நீங்கவில்லை. இறைவனை நினைத்து தியானித்தபோது, அவரைப் பற்றிய பாடல் வரிகள் தானாகவே மனதில் உதித்தன," என்று இளையராஜா தனது ஆன்மிக அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.