Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், உரிய விவரங்களை தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும்.
Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், யாருக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி தாக்கல் - இன்றே கடைசி
மத்திய அரசின் அறிவிப்பின்படி, 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், பெரும்பாலான வரி செலுத்துவதற்கு ஜுலை 31ம் தேதியன்று முடிவடைய உள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ளக் கூடும். குறிப்பாக கால தாமதத்திற்காக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட வேண்டி வரும். அதேநேரம், இன்றே கடைசி நாள் என்பது அனைத்து வகையான வரி செலுத்துவோருக்கும் பொருந்தாது. வெளியாகியுள்ள தகவலின்படி இதுவரை, 5 கோடியே 2 லட்சம் பேர் 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். கடந்த மதிப்பீட்டு ஆண்டில் ஒட்டுமொத்தமாக 6 கோடியே 97 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
யாரெல்லாம் ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி..!
ITR-1, ITR-2 விண்ணப்பங்களை தாக்கல் செய்ய தகுதியானவர்கள், ஜுலை 31ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்தாக வேண்டும். இந்த பிரிவானது பொதுவாக மாத சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் மூலதன ஆதாயங்கள் & இழப்பீடுகளை எதிர்கொள்பவர்கள் அடங்குவர்.சம்பள வருமானம் மற்றும் பிற தகுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ரூ. 1.25 லட்சம் வரையிலான நீண்ட கால மூலதன ஆதாயங்களைக் (LTCG) கொண்ட குடியுரிமை பெற்ற தனிநபர்கள் ITR-1 படிவத்தைத் தாக்கல் செய்யலாம். இருப்பினும், வணிக வருமானம் இல்லாத பட்சத்தில், ரூ. 1.25 லட்சத்திற்கு அதிகமான LTCG அல்லது வரிக்குட்பட்ட குறுகிய கால மூலதன ஆதாயங்களைக் கொண்டவர்கள் பொதுவாக ITR-2 படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். இதுபோக ITR-5 (வணிக வருமானம் இல்லாத மற்றும் தணிக்கைக்கு உட்படாதவர்கள்), வணிக வருமானம் இல்லாத சங்கங்கள் அல்லது வணிகம் செய்யாத நிறுவனங்கள், மற்றும் ITR-7 ஆவணங்களை தாக்கல் செய்பவர்களுக்கான அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது.
ITR தாக்கல் - யாருக்கு ஆக.31 வரை வாய்ப்பு?
வரி தணிக்கைக்கு உட்படாத வணிக அல்லது தொழில் வருமானம் உள்ள வரி செலுத்துவோர், தங்களது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 வரை அவகாசம் பெறுவர். வருமானத்தின் தன்மை மற்றும் தகுதியைப் பொறுத்து, அவர்கள் ITR-3 அல்லது ITR-4 படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி அறிக்கை-5 (வணிக வருமானம், தணிக்கை அல்லாத வழக்குகள்) தாக்கல் செய்பவர்களுக்கும் ஆகஸ்ட் 31, 2026 வரை அவகாசம் உள்ளது. இதற்கிடையில், கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டிய வரி செலுத்துவோர், தங்களது வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய அக்டோபர் 31 வரை அவகாசம் உள்ளது. வரித் தணிக்கைக்கான காலக்கெடு செப்டம்பர் 30 ஆகும்.
இதையும் படியுங்கள்: Nexon Rival: நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
தாக்கல் செய்ய தவறினால் என்ன நடக்கும்?
வருமான வரி அறிக்கை (ITR-1) அல்லது வருமான வரி அறிக்கை 2 (ITR-2) தாக்கல் செய்ய வேண்டிய வரி செலுத்துவோர், இன்றைக்குள் தனது கடமையை செய்து முடிக்காவிட்டால், தாமதமாகத் தாக்கல் செய்ததற்கான கட்டணம் உட்படப் பல பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F-இன் கீழ் இந்த அபராதங்கள் வேறுபடுகின்றன.
மொத்த வருமானம் ரூ. 5 லட்சம் வரை: தாமதமாகத் தாக்கல் செய்தால் ரூ. 1,000 கட்டணம்.
மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல்: தாமதமாகத் தாக்கல் செய்தால் ரூ. 5,000 கட்டணம்.
அடிப்படை விலக்கு வரம்பிற்குக் குறைவான வருமானம்: தாமதக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை
செலுத்தப்படாத வரிகளுக்கான வட்டி: வருமான வரி நிலுவையில் இருந்தால், பிரிவு 234A-இன் கீழ், செலுத்த வேண்டிய தேதியிலிருந்து வரி செலுத்தப்படும் வரை, செலுத்தப்படாத வரித் தொகையின் மீது மாதம் அல்லது மாதத்தின் பகுதிக்கு 1% என்ற விகிதத்தில் வட்டி வசூலிக்கப்படும்.
வரித் திரும்பப் பெறுதலில் தாமதம்: நீங்கள் வரித் திரும்பப் பெறுதலுக்குத் தகுதியுடையவராக இருந்தால், உரிய தேதிக்குப் பிறகு உங்கள் கணக்கு அறிக்கையைத் தாக்கல் செய்வது, உங்கள் அறிக்கை செயலாக்கப்படுவதையும், அதன் விளைவாக, நீங்கள் திரும்பப் பெறும் தொகையைப் பெறுவதையும் தாமதப்படுத்தக்கூடும்.
Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி