📅 Sunday, 09 August 2026 IST | ஆடி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 09, 2026 03:33 PM

இந்திய அணிக்கு குட் நியூஸ்.. பயிற்சிப் போட்டியில் சுப்மன் கில் பேட்டிங் ஆடியதால் ரசிகர்கள் நிம்மதி

இந்திய அணிக்கு குட் நியூஸ்.. பயிற்சிப் போட்டியில் சுப்மன் கில் பேட்டிங் ஆடியதால் ரசிகர்கள் நிம்மதி

இந்திய அணிக்கு குட் நியூஸ்.. பயிற்சிப் போட்டியில் சுப்மன் கில் பேட்டிங் ஆடியதால் ரசிகர்கள் நிம்மதி

கொழும்பு: இலங்கைக்கு எதிரான பயிற்சி போட்டியில், காயம் காரணமாக முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யாத இந்திய கேப்டன் சுப்மன் கில், 2வது இன்னிங்ஸில் களம் இறங்கி பேட்டிங் செய்தார். இது இந்திய அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கிடையே கொழும்பில் நடக்கும் 3 நாள் பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் லெவன் அணியை இந்தியா எதிர்கொண்டு ஆடியது. கடந்த வியாழக்கிழமை நடந்த வலைப்பயிற்சியின் போது சுப்மன் கில்லின் வலது கை மோதிர விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யவில்லை.

ஏற்கனவே சாய் சுதர்சன், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் இத்தொடரில் ஆட முடியாத நிலையில், கேப்டன் சுப்மன் கில்லின் காயம் அணிக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்போட்டியின் 3வது நாளில் இலங்கை அணி தனது 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இலங்கை அணியில் நிஷான் பெர்னாண்டோ 63 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் குர்னூர் பிரார், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதை அடுத்து இந்திய அணிக்கு 207 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 2வது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன் மூலம் கில்லின் காயம் தீவிரமானது அல்ல என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. காயம் குறித்து கவலைப்படாமல் ஆடிய சுப்மன் கில், விரைவாக ரன் சேர்த்தார். ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன நிலையில் 2வது இன்னிங்க்ஸில் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

வரும் ஆகஸ்ட் 15 அன்று காலே நகரில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது. சாய் சுதர்சனுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.