காரிய பூனைதான் திமுக: தவெக பதிலடி
த.வெ.க தகவல் தொழில்நுட்ப அணி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர், நம் வெற்றித் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.
காவிரி விவகாரம்
திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித்தலைவர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களை பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக? அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.
காரிய பூனைதான் திமுக
எனவே, காவிரி பிரச்சனையில் ஸ்டாலின், திமுக ஆட்சி போய் விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாக பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாக பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.