📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 07, 2026 11:33 AM

கே எல் ராகுல் தற்காலிக கேப்டனாக நியமனம்.. சுப்மன் கில்லுக்கு என்ன ஆனது? பயிற்சி ஆட்டத்தில் மாற்றம்

கே எல் ராகுல் தற்காலிக கேப்டனாக நியமனம்.. சுப்மன் கில்லுக்கு என்ன ஆனது? பயிற்சி ஆட்டத்தில் மாற்றம்

கே எல் ராகுல் தற்காலிக கேப்டனாக நியமனம்.. சுப்மன் கில்லுக்கு என்ன ஆனது? பயிற்சி ஆட்டத்தில் மாற்றம்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டம் தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் தற்காலிக கேப்டனாக அணியை வழிநடத்துகிறார். கொழும்பில் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய இலங்கை லெவன் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்திற்கு முந்தைய தினம் வலைப்பயிற்சி நடைபெற்றது.

அப்போது சுப்மன் கில்லின் வலது கை மோதிர விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரது விரலில் பந்து இருமுறை பலமாகத் தாக்கியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயிற்சி ஆட்டத்தின் முதல் நாளில் கில் விளையாட மாட்டார் என்று இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவருக்குப் பதிலாக துணை கேப்டன் கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். சுப்மன் கில்லின் உடற்தகுதியை பிசிசிஐ மருத்துவக் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இந்திய அணி ஏற்கனவே காயம் காரணமாக பல முக்கிய வீரர்களை இழந்து திணறி வருகிறது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகியதை அடுத்து, அவருக்குப் பதிலாக ஜம்மு-காஷ்மீரின் ஆகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிர, ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரும் உடற்தகுதிப் பிரச்சனைகளால் அணியில் இடம் பெறவில்லை.

வீரர்கள் அடிக்கடி காயமடைவது மற்றும் உடற்தகுதி குறைவது குறித்து பிசிசிஐ ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளதுடன், அணியின் பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயினிடம் விளக்கம் கேட்டுள்ளது. தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் இந்திய அணி ஆகஸ்ட் 15 அன்று கல்லேவில் தொடங்கவுள்ள இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில் கேப்டன் சுப்மன் கில்லின் காயம் அணிக்கு கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு முறை ரன்னர்-அப் இடத்தைப் பிடித்த இந்திய அணி, இந்த முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவது அவசியமாகிறது.