📅 Monday, 03 August 2026 IST | ஆடி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 03, 2026 05:32 PM

கம்பீருக்கு ஆப்பு வைத்த ஸ்டார் வீரர்.. பிசிசிஐயிடம் பரபரப்பு புகார்.. பதவி பறிப்போக வாய்ப்பு

கம்பீருக்கு ஆப்பு வைத்த ஸ்டார் வீரர்.. பிசிசிஐயிடம் பரபரப்பு புகார்.. பதவி பறிப்போக வாய்ப்பு

கம்பீருக்கு ஆப்பு வைத்த ஸ்டார் வீரர்.. பிசிசிஐயிடம் பரபரப்பு புகார்.. பதவி பறிப்போக வாய்ப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஒரு வருடத்திற்கு முன்பு பிசிசிஐ பெற்றிருந்த அதே அளவிலான அதிகாரம் மற்றும் ஆதரவை தற்போது கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தலைமை பயிற்சியாளர் கடுமையான அழுத்தத்தில் உள்ளார்.

தோல்விகளுக்கு வீரர்களையோ, பிசிசிஐ சிறப்பு மையத்தையோ (CoE) அல்லது பிற உதவி ஊழியர்களையோ கம்பீர் தொடர்ந்து குற்றம் சாட்டுவதாகவும், அணி நிர்வாகத்தின் முடிவுகளுக்கு அவர் பொறுப்பேற்பதில்லை என்றும் பிசிசிஐ அதிகாரிகள் சிலர் கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கம்பீரின் பயிற்சி அளிக்கும் விதம் குறித்து சில மூத்த வீரர்கள் முன்னாள் இந்திய வீரர்களிடமும், பிசிசிஐ உறுப்பினர்களிடமும் தனிப்பட்ட முறையிலும் தங்களின் கவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.கம்பீருக்கு இன்னும் பிசிசிஐயின் ஆதரவு இருந்தாலும், அணி தேர்வு, தனக்கு விருப்பமான உதவி ஊழியர்களை நியமித்தல் மற்றும் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரம் போன்ற விஷயங்களில் அவருக்கு வழங்கப்பட்ட பவரை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்று சில அதிகாரிகள் கருதுகின்றனர்.

முன்னதாக, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் தோல்விகளுக்குப் பிறகு கம்பீர் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகவில்லை, அப்போது அந்த தோல்விகளுக்கான பொறுப்பு வீரர்கள் மீதே சுமத்தப்பட்டது. தனது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் மாற்றத்திற்கான காலம் என்று எதுவும் இல்லை என்று கூறிய கம்பீர், பின்னர் அணியின் பின்னடைவுகளுக்கு இந்த மாற்றத்தையே காரணமாகக் குறிப்பிட்டது சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது.

இருப்பினும், தற்போது பிசிசிஐ போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வரவிருக்கும் இலங்கைத் தொடர் தலைமை பயிற்சியாளரான கம்பீருக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்றும் கருதப்படுகிறது. இந்தத் தொடரிலும் அணி சோபிக்கத் தவறினால், அவரது பதவிக்காலம் குறித்தான தீவிரமான கேள்விகள் எழ வாய்ப்புள்ளது.