மேட்டூர் அணை நீர்மட்டம் 88.5 அடியாக சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 88.5 அடியாக சரிவு
மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 7,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால், ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2,495 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 5,227 கனஅடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 12,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாயில் குடிநீர் தேவைக்காக 400 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 88.83 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 88.52 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 50.97 டிஎம்சியாக உள்ளது.