📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 27, 2026 03:33 PM

மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கிய விராட் கோலி

மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கிய விராட் கோலி

மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கிய விராட் கோலி-அனுஷ்கா சர்மா! விலை எவ்வளவு தெரியுமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் மேலும் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்த்துள்ளனர். அவர்கள் சமீபத்தில் மும்பையின் அந்தேரி மேற்கில் உள்ள வெர்சோவா பகுதியில் விலையுயர்ந்த பிளாட் ஒன்றை வாங்கியுள்ளனர்.

பத்திரப் பதிவு ஆவணங்களின் அடிப்படையில் விராட் மற்றும் அனுஷ்கா இணைந்து கோத்ரெஜ் ஸ்கைஷோர் கட்டிடத்தின் மேல் தளத்தில் 2,644 சதுர அடி பரப்பளவிலான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளனர். இதில் 316 சதுர அடி அளவிலான பிரத்யேக பகுதியும், மூன்று கார் நிறுத்துமிடங்களும் அடங்கும்.

இந்த சொத்தின் மதிப்பு ₹18.29 கோடி ஆகும், இது விராட் கோலியின் 2026 ஐபிஎல் சம்பளத்திற்கு கிட்டத்தட்ட சமமாகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியதற்காக இந்த சீசனில் அவர் ₹21 கோடியைச் சம்பளமாகப் பெற்றார். இந்த அடுக்குமாடி குடியிருப்பின் விற்பனைப் பரிவர்த்தனை ஜூலை 21 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக இந்த தம்பதியினர் ₹1.09 கோடியை முத்திரைக் கட்டணமாகவும், கூடுதலாக ₹30,000-ஐ பதிவு கட்டணமாகவும் செலுத்தியுள்ளனர். இதேவேளை, முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலிக்கு மும்பையின் வொர்லி பகுதியில் 7,171 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு, குருகிராமில் ஒரு பங்களா மற்றும் அலிபாக்கில் ஒரு பண்ணை வீடு ஆகியவையும் சொந்தமாக உள்ளன.

கிரிக்கெட் களத்தைப் பொறுத்தவரை, அண்மையில் இங்கிலாந்தில் நடந்து முடிந்த ஒருநாள் போட்டித் தொடரில் விராட் கோலி கடைசியாக விளையாடினார். அந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு இந்தியா திரும்பிய அவர், தனது மனைவி அனுஷ்காவுடன் விருந்தாவனில் உள்ள பிரேமானந்த் ஜி மகாராஜின் ஆசிரமத்திற்குச் சென்றார்.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அவர் ஏமாற்றமளிக்கும் விதமாகவே விளையாடினார். 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும், அடுத்த இரண்டு போட்டிகளில் விராட் கோலி தொடர்ச்சியாக அரைசதங்கள் அடித்து சிறப்பாக மீண்டு வந்தார்.

அவர் 65 மற்றும் 74 ரன்கள் எடுத்து, மூன்று இன்னிங்ஸ்களில் 48 சராசரியுடன் மொத்தம் 144 ரன்கள் குவித்தார். . விராட் கோலியின் அடுத்த கிரிக்கெட் பயணம், செப்டம்பர் 27 முதல் உள்நாட்டில் தொடங்கவுள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.