நாய் கடித்த பின் குரைக்க தொடங்கிய சிறுவன்; மரணம் நிச்சயம் என கைவிட்ட டாக்டர்கள்... 22 நாட்களுக்கு பின் நடந்த அதிசயம்
நாய் கடித்த பின் குரைக்க தொடங்கிய சிறுவனை, டாக்டர்கள் கைவிட்டபோதும் 22 நாட்களுக்கு பின் மீண்ட அதிசயம் நடந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியில் வசித்து வரும் சிறுவன் கரண். பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் கரண், வாரணாசி நகரில் உள்ள அனில் என்ற மாமா வீட்டுக்கு சென்றுள்ளான். அப்போது, 5 வயதுடைய குழந்தை ஒன்று வளர்ப்பு நாயுடன் விளையாடி கொண்டிருந்தது.
அதனை பிடித்து கரண் இழுக்க முற்பட்டபோது, குழந்தையை அடிக்க முயல்கிறான் என நினைத்து வளர்ப்பு நாய் கரணை கடித்து விட்டது. இதனை அறிந்து பதறிப்போன கரணின் தந்தை உடனே அவனை டாக்டரிடம் கொண்டு சென்றார். சிறுவனுக்கு டெட்டனஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர், தந்தையுடன் கரண் வீடு திரும்பினான். அவன், ரேபிஸ் நோய் பற்றி அறிந்திருக்கிறான். அது எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரிந்திருக்கிறான்.
இதனால், அருகேயுள்ள மருத்துவமனைக்கு அதற்கான ஊசி போட சென்றிருக்கிறான். ஆனால், கூட்டம் அதிக அளவில் இருந்தது. அப்போது, மருத்துவ ஊழியர் ஒருவர் கரணிடம், நீதான் டெட்டனஸ் தடுப்பூசி போட்டு விட்டாய் அல்லவா? உனக்கு ரேபிஸ் ஒன்றும் செய்யாது என கூறியுள்ளார். இதனால், அதனை நம்பி கரண் வீட்டுக்கு திரும்பி விட்டான்.
அவன் அவ்வப்போது சிறு சிறு வேலைக்கும் சென்று வந்துள்ளான். 4 மாதங்களாக சிறுவனுக்கு எந்த அறிகுறியும் இருக்கவில்லை. ஆனால் மார்ச் மாதம் 13-ந்தேதி மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பியவன் மயக்கம் போட்டு விழுந்து விட்டான். உடனடியாக குடும்பத்தினர் அவனுக்கு மருந்து கொடுத்தனர். இதனால், சரியானது போன்று இருந்தது.
மயக்கம் போட்ட கரண்
இந்நிலையில், இது ஏதோ, இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயம் என நினைத்து கச்வா பஜாரில் உள்ள ராமர் கோவிலுக்கு கூட்டி சென்று சிறிது நேரம் பிரார்த்தனை செய்தனர். ஆனால் நிலைமை மோசமடையவே, மருத்துவமனைக்கு கரணை கொண்டு சென்றனர். பல மருத்துவமனைகளுக்கு சென்றும் பலனில்லை. டாக்டர்கள் பலரும் உயர் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறி விட்டனர். அதற்குள் இரவு நேரம் வந்தது. இதனால், அவர்கள் வீடு திரும்பினர்.
இருட்டு அறையில்
கரண் தொடர்ந்து இரவு முழுவதும் குரைத்து கொண்டே இருந்துள்ளான். மறுநாள் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து வாரணாசிக்கு கொண்டு சென்றனர். டாக்டர் அவனை கவனித்து விட்டு, குடும்பத்தினரிடம் பேசுகிறார். அவை எல்லாவற்றையும் கரணால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஏனெனில், அப்போது கரண் மற்றவர்களை கடிக்க முயற்சிக்கும் நிலைக்கு சென்று விட்டான். அது ரேபிஸ் நோயின் இறுதி கட்டம் என டாக்டர்கள் நினைத்து விட்டனர். இதனை கேட்டு கரண் குடும்பத்தினர் உடைந்து போய் விட்டனர். எனினும் கரணை வீட்டுக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம் என கூறினர்.
5 தடுப்பூசிகள்
இதனால், கரணை கபில் சவுரா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர் அறிவுறுத்தினார். இதன்பின்னர் 2 மருத்துவமனைகளுக்கு சென்றும் டாக்டர்கள் எல்லோரும் நம்பிக்கையில்லை என தெரிவித்து விட்டனர்.
இதன்பின்னர் சொந்தக்காரரான சுமன் என்பவர் முதன்மை சுகாதார நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவரிடம் கரணை கொண்டு சென்றனர். அவர் ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தினார். 3 நாட்கள் கழித்து, ஒரு தடுப்பூசியும், ஒரு வாரம் கழித்து 3-வது தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. அடுத்த 2 வாரங்களில் 2 தடுப்பூசிகள் போடப்பட்டன.
டாக்டர் விளக்கம்
ஆசிரியர்களும் அவனிடம் வழக்கம்போல் பேசுகின்றனர். நடந்து கொள்கின்றனர். தீர்க்க முடியாத நோயாக ரேபிஸ் நோய் இருந்தபோதும், கரணுக்கு எப்படி உடல்நலம் தேறியது? என்று மாவட்ட மருத்துவமனையின் டாக்டர் தேவேந்திர பிரதாப் பட்டேல் விளக்கம் அளித்துள்ளார்.
மனதளவில் பாதிப்பு
அவர் கூறும்போது, நாய் கடித்த இடம் மற்றும் அறிகுறிகளுக்கான நேரம் ஆகியவை விரைவாக ரேபிஸ் பரவுவதற்கான காரணிகளாக உள்ளன. கரணை கையில் கடித்துள்ளது. இதனால், அறிகுறிகள் வெளிப்பட நீண்ட நாட்கள் ஆகியுள்ளன. கழுத்து, நெஞ்சு பகுதியில் நாய் கடி இருந்தது என்றால், பிழைப்பது கடினம். மற்றொரு காரணம், அந்த நாய் வளர்ப்பு நாயாக உள்ளது.