📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil July 24, 2026 11:30 AM

பண்பாடுகளை இணைக்கும் இலக்கியப் பாலம்

பண்பாடுகளை இணைக்கும் இலக்கியப் பாலம்

நான்கு மொழிக் கவிதை விழாவான சிங்கப்பூர் கவிதை விழா 2026 வெள்ளிக்கிழமை (ஜூலை 24) தொடங்குகிறது.

விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் ‘தி பாட்’ (The Pod) அரங்கில் மாலை 6 மணி முதல் 7.30 மணிவரை தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும்.

கலாசாரப் பதக்கம் பெற்ற பேராசிரியர் வாங் யூன் வா, ‘நன்யாங் கவிதைகள்’ குறித்தும் மொழிபெயர்ப்பு குறித்தும் சிறப்புரையாற்ற உள்ளார். தொடக்க விழாவில் உள்ளூர் மற்றும் அனைத்துலகக் கவிஞர்களின் கவிதை வாசிப்பு, பல்லூடகம் வழியிலான படைப்புகள், மொழிபெயர்ப்பு - கலைப் பரிமாற்றங்கள் குறித்த கலந்துரையாடல் ஆகியவையும் இடம்பெறும்.

சிங்கப்பூர்க் கவிதை விழா 12வது ஆண்டாக நடைபெறுகிறது. இவ்வாண்டு விழாவின் கருப்பொருள், ‘எல்லைகளும் பாலங்களும்’ (Borders and Bridges) என்பதாகும். ஞாயிற்றுக்கிழமைவரை நடைபெறவுள்ள இந்த மூன்று நாள் விழா, பல்வேறு மொழிகள், பண்பாடுகள், சமூகங்களை இணைக்கும் பாலமாகக் கவிதை விளங்குவதைக் கொண்டாடுகிறது.

சனி, ஞாயிறு இரு நாள்களிலும் கவிதை வாசிப்பு, பயிலரங்கு, உரையாடல் எனப் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய நூலகத்தின் ‘தி பாட்’, 5வது மாடியில் உள்ள ‘இமேஜினேஷன்’ அறை, ‘பாசிபிலிட்டி’ அறை, பி1 தளத்திலுள்ள நிகழ்ச்சி அரங்கு ஆகிய இடங்களில் இந்நிகழ்வுகள் நடைபெறும்.

இசையும் கவிதையும்

சிங்கப்பூர் இளையர்களின் கவிதை வரிகளுக்குப் பிலிப்பீன்ஸின் புகழ்பெற்ற ‘மெகோசோனோ ஆர்க்கெஸ்ட்ரா’ (Mecosono Orchestra) குழுவினர் தங்களின் இன்னிசையால் உயிரூட்ட உள்ளனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சனிக்கிழமை மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை தேசிய நூலகத்தின் பி1 தளத்திலுள்ள நிகழ்ச்சி அரங்கு 2இல் இந்நிகழ்ச்சி நடைபெறும். பத்துப் படைப்பாளர்களின் கவிச்சுவையைப் பல்வேறு இசைக்கருவிகளின் பின்னணி இசையோடு ரசித்து மகிழலாம்.