Latest News
July 28, 2026 05:33 AM
பழநி நில மோசடி வழக்கில் சார் பதிவாளரிடம் 7 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை
ஜஸ்டின் மணிகண்டன்
திண்டுக்கல்: பழநியில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் நேற்று சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து 7 மணிநேரம் விசாரணை நடந்த நிலையில், மாலை 5 மணிக்கு மேல் அவரை அங்கிருந்து சிபிசிஐடி போலீஸார் அனுப்பிவைத்தனர். மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.