📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 14, 2026 08:03 AM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மறந்து விடுங்கள்.. இது தான் முக்கியம்.. இந்திய அணிக்கு அஸ்வின் அறிவுரை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மறந்து விடுங்கள்.. இது தான் முக்கியம்.. இந்திய அணிக்கு அஸ்வின் அறிவுரை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மறந்து விடுங்கள்.. இது தான் முக்கியம்.. இந்திய அணிக்கு அஸ்வின் அறிவுரை

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது குறித்து யோசிப்பதை நிறுத்திவிட்டு, தற்போதைய ஆட்டத்தில் கவனம் செலுத்துமாறு இந்திய அணிக்கு முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு மணி நேரத்தையும் திறம்பட எதிர்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியா அதற்கு முந்தைய 2021 மற்றும் 2023 ஆகிய இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றிருந்தாலும், 2025 ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டியைத் தவறவிட்டது.

தற்போதைய 2025-27 சைக்கிளில் இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்த நாட்டுத் தொடரை 2-0 என இழந்ததால், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது.

இலங்கைத் தொடருக்குப் பிறகு, இந்திய அணி நியூசிலாந்தில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால், இந்த 10 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 6 முதல் 7 போட்டிகளில் இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இது குறித்து பேசிய அஸ்வின், "டிரெஸ்ஸிங் ரூமில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பற்றி நிச்சயம் பேசுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அங்கு இருந்தால், எனது சிந்தனை முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். WTC ஐ மறந்துவிடுங்கள், அது இன்னும் வெகு தொலைவில் உள்ளது. இப்போது நாம் எங்கே இருக்கிறோம்?"

"இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரை நாம் இழந்துள்ளோம். ஒரு டெஸ்ட் அணியாக நமக்கு இது நல்ல காலமாக அமையவில்லை. எனவே, இந்தத் தொடரை ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதி சிறப்பாகச் செயல்படுங்கள். ஒரு நேரத்தில் ஒரு நாள், ஒரு செஷன், ஒரு மணி நேரம், ஒரு ஓவர் அல்லது ஒரு பந்து என ஒவ்வொன்றிலும் மட்டும் கவனம் செலுத்துங்கள்," என்று அவர் கூறினார்.

"ஏனெனில் வாழ்க்கையில் இதுதான் மிக முக்கியமானது. நாம் கடந்த காலத்தைப் பற்றி பேசலாம், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம், எதிர்காலத்தைப் பற்றி கனவு காணலாம். ஆனால் நிகழ்காலத்தில் வாழ்வது மிகவும் கடினம். இன்றைய நிகழ்காலம் என்பது நாளை மற்றொருவரின் கடந்த காலம். எனவே நீங்கள் நிகழ்காலத்தில் கவனம் செலுத்தினால், சிறப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்."

"வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்றால், மைதானத்தில் இருக்கும் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும் நிகழ்காலத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் உங்களால் வரலாற்றின் ஒரு பகுதியாக மாற முடியும். நிகழ்காலத்தில் உங்களால் கவனம் செலுத்த முடியாவிட்டால், எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணவும் முடியாது, வரலாற்றை உருவாக்கவும் முடியாது," என்று அஸ்வின் அறிவுறுத்தினார்.