📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news September 08, 2026 06:04 PM

ஊருக்குள் தொடர்ந்து 4 நாட்களாக இரவில் நிர்வாணமாக வலம் வந்த கணவன், மனைவி; காரணம் கேட்டு அதிர்ந்த கிராம மக்கள்

ஊருக்குள் தொடர்ந்து 4 நாட்களாக இரவில் நிர்வாணமாக வலம் வந்த கணவன், மனைவி; காரணம் கேட்டு அதிர்ந்த கிராம மக்கள்

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே "என் மீது கருப்பசாமி இறங்கியுள்ளார்" எனக் கூறி, கணவனும் மனைவியும் கடந்த 4 நாட்களாக ஆடைகளின்றி நிர்வாணமாக ஊருக்குள் வலம் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் திகைப்பையும்,பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வினோதமான பூஜைகள்

திருப்பத்தூர் மாவட்டம், கரம்பூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 56). இவருடைய மனைவி (தீபா 48). இந்த தம்பதியினர் கடந்த சில நாட்களாக வீட்டின் உள்ளே வினோதமான பூஜைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென தங்களுக்குள் சாமி வந்துவிட்டதாக கூறிக்கொண்டு, கணவன்-மனைவி இருவருமே ஆடைகளின்றி நிர்வாண நிலைக்கு மாறியுள்ளனர்.

நாசமாகி விடுவீர்கள்

கடந்த 4 நாட்களாக தெருக்களில் அவர்கள் வலம் வர, இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அலறியடித்து வீட்டிற்குள் ஓடினர். விபரீதத்தை உணர்ந்து பொதுமக்கள் அவர்களை தட்டிக்கேட்டபோது, "எங்களை எதிர்த்தால் நீங்கள் அனைவரும் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள்" என கணவன்-மனைவி இருவரும் ஊர் மக்களை நோக்கி சாபமிட்டு, மிரட்டல் விடுத்துள்ளனர்.

லைவ் வீடியோ

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களின் பிடியில் இருந்த தம்பதியினரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பத்தூர் கரம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.