📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 11, 2026 02:04 PM

விராட் கோலி போல ஃபிட்டாக மாற “தவறான ஊசி” போடும் ஐபிஎல் வீரர்கள்.. குறுக்கு வழியில் ஃபிட்னெஸ்

விராட் கோலி போல ஃபிட்டாக மாற “தவறான ஊசி” போடும் ஐபிஎல் வீரர்கள்.. குறுக்கு வழியில் ஃபிட்னெஸ்

விராட் கோலி போல ஃபிட்டாக மாற “தவறான ஊசி” போடும் ஐபிஎல் வீரர்கள்.. குறுக்கு வழியில் ஃபிட்னெஸ்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியைப் போல உடற்தகுதியுடனும், ஒல்லியாகவும் காட்சியளிக்க சில இந்திய கிரிக்கெட் வீரர்கள் உடல் எடையைக் குறைக்கும் ஊசிகளைப் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு சில உடல்நலக் குறைவுகளை சரி செய்ய பயன்படும் மருந்தை இந்த உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

கிரிக் பிளாகர் (Cric blogger) செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னணி வீரர்கள் மற்றும் சில இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடலை தடகள வீரர்களைப் போல மாற்றிக் கொள்ள 'ஓசெம்பிக்' மற்றும் 'மவுஞ்சாரோ' போன்ற எடையைக் குறைக்கும் ஊசிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். விராட் கோலி கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மூலம் பல ஆண்டுகள் உழைத்து தனது உடலை மாற்றினார். ஆனால், சிலர் அந்த நீண்ட உழைப்பிற்குப் பதிலாக இந்த குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வெளியான தகவலில், "வழக்கமான உடற்பயிற்சிகளுடன் உடல் எடையைக் குறைக்க இது ஒரு எளிதான குறுக்குவழியாகப் பார்க்கப்படுகிறது. இதனால்தான் சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 'ஓசெம்பிக்' மருந்து டைப் 2 நீரிழிவு நோய்க்கும், 'மவுஞ்சாரோ' மருந்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. இவை இரண்டும் ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் பசியைக் கட்டுப்படுத்தி செரிமானத்தை மெதுவாக்குவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. ஆனால், இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களிடையே சமீபகாலமாக காயம் ஏற்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் உள்ளிட்ட பல வீரர்கள் காயமடைந்து பிசிசிஐ-யின் செயல்பாட்டு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய சூழலில், வீரர்கள் தங்களது உடற்தகுதியைக் காட்ட, குறிப்பாக காயத்தில் இருந்து மீண்டு வர ஓய்வில் இருக்கும் போது உடல் எடை அதிகரித்தால் அதை குறைத்துக் காட்ட இதுபோன்ற ஆபத்தான மருந்துகளைப் பயன்படுத்துவது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.