📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 15, 2026 12:04 PM

சுதந்திர தினம் அன்று இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய போட்டிகளின் முடிவு என்ன?

சுதந்திர தினம் அன்று இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய போட்டிகளின் முடிவு என்ன?

சுதந்திர தினம் அன்று இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய போட்டிகளின் முடிவு என்ன?

காலே: ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணி களம் கண்ட போட்டிகள் எப்போதும் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 1952 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டிரா போட்டியில் தொடங்கி, விராட் கோலியின் அதிரடி சதங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகள் வரை பல முக்கிய நிகழ்வுகள் இந்த நாளில் அரங்கேறியுள்ளன.

சுதந்திர தினத்தன்று இந்திய அணி விளையாடிய போட்டிகளின் முழுமையான வரலாற்றை இங்கு காண்போம். இந்திய அணி தனது 600-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதுடன், இப்போட்டி சுதந்திர தினத்தன்று தொடங்குவது கூடுதல் சிறப்பாகும். இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15, 2026 அன்று தொடங்குகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 15 அன்று இந்திய அணி விளையாடிய முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இங்கிலாந்துக்கு எதிரான இப்பயணத்தில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து பெய்த மழையால் இப்போட்டி டிராவில் முடிவடைந்தது. விஜய் ஹசாரே தலைமையிலான இந்த அணியில் பாலி உம்ரிகர், வினூ மன்கட் மற்றும் விஜய் மஞ்சுரேகர் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

1952 ஆம் ஆண்டிற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப்பின் சுதந்திர தினத்தன்று இந்திய அணி விளையாடிய போட்டி இதுவாகும். இலங்கைக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் முறையே 187 மற்றும் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியின் சனத் ஜெயசூரியா அதிரடியாக சதம் விளாசினார். முத்தையா முரளிதரன் இப்போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி, இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினார்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி வெறும் மூன்று நாட்களில் முடிவடைந்தது. இங்கிலாந்து அணி இந்திய பேட்டிங் வரிசையை சிதறடித்து 148 மற்றும் 94 ரன்களுக்கு சுருட்டியது. இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 149 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. சுதந்திர தினத்தை உள்ளடக்கிய டெஸ்ட் போட்டியில் இந்தியா சந்தித்த தொடர்ச்சியான 2-வது தோல்வி இதுவாகும்.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி (103) மற்றும் ஷிகர் தவான் (134) ஆகியோரின் சதங்களின் உதவியோடு இந்திய அணி 192 ரன்கள் முன்னிலை பெற்றது. இருந்தபோதிலும், சுதந்திர தினத்தன்று இந்திய அணி கடுமையான பேட்டிங் வீழ்ச்சியைச் சந்தித்தது. 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, ரங்கனா ஹேரத்தின் மிகச்சிறந்த பந்துவீச்சில் (7 விக்கெட்டுகளுக்கு 48 ரன்கள்) சுருண்டு 112 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உள்ளூர் நேரப்படி இப்போட்டி ஆகஸ்ட் 14 அன்று தொடங்கினாலும், இந்திய நேரப்படி ஆகஸ்ட் 15 அதிகாலை வேளையில்தான் முடிவடைந்தது. இதனால் இது சுதந்திர தினத்தன்று இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி பெற்ற முதல் வெற்றியாகப் பதிவானது. மழை காரணமாக 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது.

டக்வொர்த் லூயிஸ் (DLS) முறைப்படி மாற்றியமைக்கப்பட்ட 255 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. விராட் கோலி ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் (அவரது 43-வது ஒருநாள் சதம்) குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருடன் இணைந்து ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் 65 ரன்கள் குவித்து 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்றுப் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரின் 9-வது விக்கெட்டுக்கான ஆட்டமிழக்காத 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்தியாவை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றது. பின்னர் 120 ரன்களுக்கு இங்கிலாந்து அணியை சுருட்ட முகமது சிராஜ் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை (4/32) வீழ்த்தினார்.