📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 12, 2026 01:04 PM

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கைது.. 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அதிரடி

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கைது.. 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அதிரடி

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கைது.. 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அதிரடி

சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் கிரிக்கெட் வீரர் ஆரோன் சம்மர்ஸ், இளம் ரசிகையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், போட்டியின்போது சந்தித்த சிறுமியை அவர் பழகி நம்பிக்கை பெறச் செய்து , பின்னர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும், இதனால் அவர் 10 மாதங்கள் சிறையில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாஸ்மேனியா நீதிமன்ற நீதிபதி ஹெலன் வுட், இளம் நபர்களை அணுகுவதற்காக சம்மர்ஸ் தனது விளையாட்டு வீரர் என்ற அடையாளத்தை பயன்படுத்தியதாக கூறினார். 2017 டிசம்பரில் ஹோபார்டில் நடந்த ஒரு போட்டியின்போது, பிக் பாஷ் லீக்கில் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த சம்மர்ஸ், அந்த சிறுமியையும் அவரது நண்பர்களையும் சந்தித்தார்.

2018 ஜனவரி 15 அன்று நடந்த மற்றொரு போட்டியில், பவுண்டரி லைனில் நிற்கும் போது பேசினர். பின்னர் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் மூலம் தொடர்பில் இருந்தனர். மறுநாள் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்தனர். சம்மர்ஸ் சிறுமியை அழைத்துச் சென்று இரவில் ஒரு பள்ளிக்குச் சென்றார்.

அப்போது 21 வயதாக இருந்த சம்மர்ஸ், பள்ளியில் ஒரு போர்வையை விரித்து, அந்த சிறுமியை இருமுறை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். தண்டனை அறிவிக்கும் போது நீதிபதி வுட், அந்த சிறுமி 9 அல்லது 10ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார் என்றும், பாலியல் சம்மத வயதிற்குக் கீழே இருந்தார் என்பதையும் சம்மர்ஸ் அறிந்திருந்தார் என்றும் கூறினார்.

அந்த சிறுமி பாதிக்கப்படக்கூடிய நிலையிலும், அறியாமையுடனும் இருந்ததாகவும், தனது பாலியல் நோக்கங்களை சம்மர்ஸ் அவரிடம் வெளிப்படுத்தவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது."அவளுக்கு வயது 15 மட்டுமே. அவருக்கு ஆர்வம் இருந்தது பாலியல் உறவில்தான் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு வாழ்க்கை அனுபவம் அவளுக்கு இல்லை," என்று நீதிபதி கூறினார்.

இதற்கு பிறகும் சம்மர்ஸ் அந்த சிறுமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, வெளிப்படையான படங்களை அனுப்பியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இருவருக்கிடையேயான கடைசி தொடர்பு 2021 தொடக்கத்தில் நடந்தது. குழந்தையை பழகி நம்பிக்கை பெறச் செய்த ஒரு குற்றச்சாட்டுக்கும் சம்மர்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.