தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்துவதே அரசின் இலக்கு: அமைச்சர் ஸ்ரீநாத் பேச்சு
தூத்துக்குடி,
காற்றாலை உள்ளிட்ட பசுமை எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்தி தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்று தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) மாநில அளவிலான தொழில் வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பேசியதாவது:
தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி
குண்டூசி முதல் கப்பல் வரை தயாரிக்கும் கட்டமைப்பு வசதிகள்
காற்றாலை உள்ளிட்ட பசுமை எரிசக்தி திட்டங்களை விரிவுபடுத்தி, தூத்துக்குடியை சிங்கப்பூர் அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும் என்பதே அரசின் இலக்காகும். தொழில் வளர்ச்சியை உயர்த்த அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்; அதேபோல் தொழில் துறையினரும் தங்களின் பங்களிப்பை வழங்கி இந்தக் கனவை நனவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் தொழில் வல்லுநர்கள் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்த பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைத்தனர். நிகழ்ச்சியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு தலைவர் தேவராஜன், துணை தலைவர் முருகவேல், தமிழ்நாடு தலைவர் ஜெய் கிருஷ்ணன், தூத்துக்குடி தலைவர் முரளி கணேசன், துணை தலைவர் செந்தில்குமார் சுப்ரமணியன் உள்பட பல தொழிலதிபர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.