த.வெ.க.
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் தலைமையில் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.</p> <p class="mb-4 leading-relaxed">அதன்படி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.</p> <p class="mb-4 leading-relaxed">தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து 3 அதிமுக எம்எல்ஏக்களுக்கு ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.</p> <p class="mb-4 leading-relaxed">இதனால், அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 44-ஆக குறைந்தது.</p> <p class="mb-4 leading-relaxed">ராஜினாமா செய்த 3 பேரும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> <p class="mb-4 leading-relaxed">எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் சிலர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.</p> <p class="mb-4 leading-relaxed">இந்நிலையில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தகையோடு மரகதம் குமரவேல், செயக்குமார், சத்யபாமா ஆகிய 3 பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை நேரில் சந்தித்தனர்.</p> <p class="mb-4 leading-relaxed">ராஜினாமா செய்த 3 பேரையும் பொன்னாடை போர்த்தி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வரவேற்றார்.</p> <p class="mb-4 leading-relaxed">தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்த 15 நாளில் அம்மாவின் ஆட்சியை பார்க்கிறோம் என ஆதவ் அர்ஜூனாவிடம் சத்யபாமா நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.</p> <p class="mb-4 leading-relaxed">முதல்வர் விஜயை நம்பி வந்திருக்கிறீர்கள் இனி நல்லதே நடக்கும், நாம் இனி ஒரே குடும்பமாக பயணிப்போம் என ஆதவ் அர்ஜூனா உறுதி அளித்துள்ளார்.</p> <p class="mb-4 leading-relaxed">ராஜினாமா செய்த 3 பேரும் இன்னும் சற்று நேரத்தில் முதலமைச்சர் விஜயை சந்திக்க உள்ளனர்.