📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
தமிழ் திரையிசை பாடல்களைப் பாடி அசத்திய இளங்குயில்கள் இணையத் தாக்குதல், மோசடி பாதிப்புகளைச் சமாளிக்க காப்புறுதிகளை அதிகம் நாடும் சிங்கப்பூர் நிறுவனங்கள் உதவி தேவைப்படும் சிறார்களுக்கு நன்கொடை திரட்டிய காற்பந்தாட்டம் மேட்டூர் அணை திறந்து 12 நாளாகியும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை: அதிமுக மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு! பெரம்பலூர் அருகே நாட்டார்மங்கலத்தில் தவெக கிளைச் செயலாளருக்கு அரிவாள் வெட்டு: பக்கத்து வீட்டுகாரர் வெறிச்செயல்
தமிழ் திரையிசை பாடல்களைப் பாடி அசத்திய இளங்குயில்கள் இணையத் தாக்குதல், மோசடி பாதிப்புகளைச் சமாளிக்க காப்புறுதிகளை அதிகம் நாடும் சிங்கப்பூர் நிறுவனங்கள் உதவி தேவைப்படும் சிறார்களுக்கு நன்கொடை திரட்டிய காற்பந்தாட்டம் மேட்டூர் அணை திறந்து 12 நாளாகியும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை: அதிமுக மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு! பெரம்பலூர் அருகே நாட்டார்மங்கலத்தில் தவெக கிளைச் செயலாளருக்கு அரிவாள் வெட்டு: பக்கத்து வீட்டுகாரர் வெறிச்செயல்
Latest News July 30, 2026 12:33 AM

7,000 மாணவர்களுக்கு HIV தொற்று; கர்நாடகாவில் அதிர்ச்சி... கல்லூரிகளில் பரிசோதனைக்கு உத்தரவிட்ட அரசு!

7,000 மாணவர்களுக்கு HIV தொற்று; கர்நாடகாவில் அதிர்ச்சி... கல்லூரிகளில் பரிசோதனைக்கு உத்தரவிட்ட அரசு!

7,000 மாணவர்களுக்கு HIV தொற்று; கர்நாடகாவில் அதிர்ச்சி... கல்லூரிகளில் பரிசோதனைக்கு உத்தரவிட்ட அரசு!

7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 7,000-க்கும் மேற்பட்டோருக்கு ஹெச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ஹெச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய அதிகாரபூர்வ தரவுகளின்படி, 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருவது பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகா 3-வது இடத்தில் உள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களுக்கே ஹெச்.ஐ.வி தொற்று மிக வேகமாக உயர்ந்து வருகிறது என KSAPS தரவுகள் சொல்கின்றன.

சமீபத்தில் 18-25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று இருப்பது உறுதியானதால், கல்லூரி வளாகங்களிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கல்லூரிகளில் விழிப்புணர்வு, ஆலோசனை மற்றும் ஹெச்.ஐ.வி பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்வது நிறுவனங்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், மாணவர்கள் தங்களின் சம்மதத்தைத் தந்தால் மட்டுமே பரிசோதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமாகவே முன்வந்து பரிசோதனை செய்வதை ஊக்குவிப்பது மற்றும் தொற்று உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே இதன் முதன்மை நோக்கம் என அரசு கூறியுள்ளது.