📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News May 29, 2026 09:00 PM

8

8

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்துவதற்கான ஊதியக் குழுவை அமைக்கும். இந்த குழு பல்வேறு அமைப்புகளிடம் ஆலோசனை நடத்தி அதன்பின் அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் சம்பளம் உயர்த்தப்படும்.

1.1 கோடி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்துவதற்காக 8-வது ஊதியக்குழு கடந்த 2025-ல் அமைக்கப்பட்டது. 18 மாதத்திற்குள் இந்த குழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி அடுத்த வருடம் மத்தியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிட்பென்ட் பேக்டர் பார்முலா

லெவல் 1 முதல் 5-க்கு 2.92 பிட்பென்ட் பேக்டர்

லெவல் 6 முதல் 8-க்கு 3.50 பிட்பென்ட் பேக்டர்

லெவல் 9 முதல் 12-க்கு 3.80 பிட்பென்ட் பேக்டர்

லெவல் 13 முதல் 16-க்கு 4.09 பிட்பென்ட் பேக்டர்

லெவல் 17 முதல் 18-க்கு 4.38 பிட்பென்ட் பேக்டர்

இதை ஊதியக் குழு ஏற்றுக் கொண்டால், மிகப்பெரிய அளவில் பிரமாண்டாக சம்பள உயர்வு இருக்கும்.

National Council-Joint Consultative Machinery அடிப்படை சம்பளம் 69 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. Bharatiya Pratiraksha Mazdoor Sangh அடிப்படை சம்பளம் 72 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு மத்திய அரசு தயாராகுமா? என்பது கடினமான ஒன்றுதான்.