📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 15, 2026 07:03 AM

80

80

80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள 112 அடி உயர ஆதியோகி சிலை, தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது

தேசியக்கொடி நிறத்தில் ஆதியோகி

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் 112 அடி உயர ஆதியோகி சிலை, மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆதியோகி சிலை மீது முப்பரிமாண லேசர் ஒளிப்பாய்ச்சல் மூலம் தேசியக்கொடியின் காவி, வெள்ளை, பச்சை ஆகிய நிறங்கள் பிரதிபலிக்கப்பட்டன.

இரவு நேரத்தில் வான்வெளியில் ஒளிர செய்யப்பட்ட மூவர்ண காட்சியானது, அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் பலத்த தேசப்பற்றையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது.

லேசர் ஒளிக்காட்சி

ஆதியோகி சிலையின் இந்த மூவர்ண அலங்கார புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. உலகிலேயே மிகப்பெரிய திருமுக சிலையாக கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்த ஆதியோகி சிலைக்கு, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய தேசிய விழாக்களின் போது இதுபோன்று மூவர்ண ஒளியூட்டப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.