📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 20, 2026 11:32 PM

அகழாய்வு: வெள்ளலூரில் கிடைத்த 'தக்களி'..சங்ககால ஜவுளித் தொழிலின் புதிய தடயமா?

அகழாய்வு: வெள்ளலூரில் கிடைத்த 'தக்களி'..சங்ககால ஜவுளித் தொழிலின் புதிய தடயமா?

அங்கு மாணவர்கள், ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள் என பலரும் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

அங்கு வந்தவர்களின் சந்தேகங்களுக்கு, அகழாய்வின் பின்னணி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார் வெள்ளலூர் அகழாய்வு இயக்குநர் சுரேஸ்.

பத்தாம் நூற்றாண்டில் 'தென்னூர்' என அறியப்பட்ட இப்பகுதி, பதினோராம் நூற்றாண்டில் 'வெள்ளலூர்' என்ற பெயரைப் பெற்றது. வேளீர்கள் என்ற குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் 'வேளிலூர்' என்றும் அழைக்கப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

'வெள்ளநீர் தேங்கும் இடம்' என்பதன் அடிப்படையிலேயே 'வெள்ளலூர்' என்ற பெயர் உருவானதாகவும் விளக்கப்படுகிறது.

அகழ்வாராய்ச்சி தொடங்குவதற்கான மூலகாரணம்:

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தற்செயலாக நடைபெற்ற இரண்டு தனித்தனி ஆய்வுகளில் மொத்தம் ஆயிரம் ரோமன் நாணயங்கள் கிடைத்ததாக வரலாற்று ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதுவே தற்போதைய அகழாய்வுக்கான முக்கிய அடிப்படையாக அமைந்ததாக இயக்குநர் சுரேஸ் விளக்கினார்.