📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 23, 2026 06:03 AM

செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர்

செந்தில்பாலாஜி லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜர்

லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜர் ஆனார்.

டாஸ்மாக் முறைகேடு

இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை 11 மணியளவில் ஆஜர் ஆனார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் பார் உரிமம் வழங்குவதில் மதுபானங்களை கொள்முதல் செய்தல், மதுபானங்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து ஒப்பந்தங்களை மேற்கொண்டது ஆகியவற்றின் முறைகேடு நடந்திருப்பதாக கூறியே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று ஆஜர் ஆன செந்தில்பாலாஜியிடம் அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.