சிஎஸ்கே அணியிடமே சரியான தேர்வு இருக்கு.. நீங்க கிரிக்கெட் வர்ணணை வேலை மட்டும் பாருங்க
சிஎஸ்கே அணியிடமே சரியான தேர்வு இருக்கு.. நீங்க கிரிக்கெட் வர்ணணை வேலை மட்டும் பாருங்க- ஸ்ரீகாந்த்
சென்னை: சிஎஸ்கே அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக இயான் மோர்கன் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரை நியமிக்கக் கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மோர்கன் சர்வதேச அளவில் எந்த ஒரு அணிக்கும் பயிற்சியாளராகச் செயல்பட்ட அனுபவம் இல்லாதவர் என்றாலும், இங்கிலாந்து அணிக்கு முதல் மற்றும் ஒரே ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
மேலும், 2020 மற்றும் 2021 ஐபிஎல் சீசன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு, 2021-ல் அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். மற்றொருபுறம், மெக்கல்லம் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு வரை, இங்கிலாந்து அணியின் அனைத்து வகையிலான அணிக்கும் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.
சிஎஸ்கே அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் தேர்வு குறித்து பேசிய ஸ்ரீகாந்த் "நான் நிச்சயமாக இயான் மோர்கனைத் தேர்ந்தெடுக்க மாட்டேன். அவர் ஒரு சிறந்த வீரராகவும், இங்கிலாந்து அணிக்கு ஒரு நல்ல கேப்டனாகவும் இருந்தார். ஆனால் ஒரு பயிற்சியாளராக அவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தபோது கூட அவர் பெரிய அளவில் எதையும் சாதிக்கவில்லை."
"அவர் வர்ணனையாளராகவே தொடர்வது தான் அவருக்கு நல்லது. அதேபோல், பிரண்டன் மெக்கல்லத்தையும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்காமல் இருப்பது சிஎஸ்கே அணிக்கு நல்லது. மோர்கன் மற்றும் மெக்கல்லம் ஆகிய இருவருக்குமே சிஎஸ்கே 'நோ' சொல்ல வேண்டும்."
"மிஸ்டர் கிரிக்கெட் நம்மோடு இருக்கும்போது சிஎஸ்கேவுக்கு வெளியில் இருந்து யாரும் தேவையில்லை. மைக்கேல் ஹசி தான் அடுத்த தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க வேண்டும். அவரே மிகச் சிறந்த தேர்வாக இருப்பார். ஆனால், வருங்காலத்தில் சிஎஸ்கேவில் தோனியின் இடம் என்னவாக இருக்கும்? அந்த ஏற்பாட்டை முதலில் சரி செய்ய வேண்டும், அதன் பிறகு தான் மற்ற அனைத்தும் சரியாக அமையும்," என்று ஸ்ரீகாந்த் கூறினார்.