இளையர்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கப் புதிய ஏற்பாடு
தங்களின் பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்போரைத் தேடும் அதேவேளை மனநல ஆலோசகரை நேரில் சென்று நாடத் தயங்கும் இளையர்களுக்குப் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேட் சர்க்கல்ஸ்
‘எம்பேக்ட்’ எனும் சமூக அமைப்பு, புதன்கிழமை (ஆகஸ்ட் 26) இத்திட்டத்தைத் தொடங்கியது. இதில் மருத்துவரீதியான சோதனைகள், சம்பந்தப்பட்டவர்கள் விரும்பாத அறிவுரை போன்றவை இருக்காது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிலைய வளாகங்களில் அமர்வுகளை நடத்த உயர்கல்வி நிலையங்களுடனும் வசதி குறைந்த இளையர்களுக்குச் சேவையாற்றும் நன்கொடை அமைப்புகள் போன்ற சமூகப் பங்காளிகளுடனும் இணைந்து செயல்பட எம்பேக்ட் திட்டமிட்டுள்ளது.
எஸ்ஜி இளையர் திட்டத்தின் அங்கம்
“நமது இளையர்கள் எதிர்கொள்ளும் எல்லா சவால்களையும் அகற்ற முடியாது. அதை அவர்கள் எதிர்பார்க்கவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதேவேளை, அவர்கள் தாங்களாக மட்டும் பிரச்சினைகளைச் சமாளிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்,” என்று அவர் விவரித்தார்.