📅 Friday, 07 August 2026 IST | ஆடி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 07, 2026 12:33 PM

IND vs SL பயிற்சி ஆட்டம்.. இலங்கை அணி ரன் குவிப்பு.. பவுலிங்கில் தடுமாறும் இந்திய பவுலர்கள்

IND vs SL பயிற்சி ஆட்டம்.. இலங்கை அணி ரன் குவிப்பு.. பவுலிங்கில் தடுமாறும் இந்திய பவுலர்கள்

IND vs SL பயிற்சி ஆட்டம்.. இலங்கை அணி ரன் குவிப்பு.. பவுலிங்கில் தடுமாறும் இந்திய பவுலர்கள்

கொழும்பு: இந்தியா மற்றும் இலங்கை லெவன் அணிகளுக்கு இடையேயான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் முதல் நாளில், இலங்கை அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்து திருப்புமுனை கிடைத்துள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை லெவன் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பயிற்சிப் போட்டியின் முதல் நாளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் விளையாடவில்லை. முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சியின் போது, அவரது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு மைதானத்தில் மருத்துவ உதவியும் வழங்கப்பட்டது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் களம் இறங்காத நிலையில், கேஎல் ராகுல் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியை தற்காலிக கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.இலங்கை லெவன் அணியின் ஆட்டத்தை முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் பந்துவீசி தொடங்கினர். முகமது சிராஜ் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து நிஷான் மதுஷ்கா ரன் கணக்கைத் தொடங்கினார்.

பிரசித் கிருஷ்ணாவின் ஓவரில் ரசந்தா ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசினார்.இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத நிலையில், தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல், குர்நூர் பிரார் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை பந்துவீச அழைத்தார். எனினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மதுஷ்கா அரைசதம் கடந்து விளையாடினார். 18.5 ஓவர்களில் இலங்கை லெவன் விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது. பின்னர் 20.4 ஓவரில் மதுஷ்கா 66 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

அதிரடியாக விளையாடிய மதுஷ்கா 65 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 66 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் இலங்கை லெவன் அணியின் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் முறியடிக்கப்பட்டது. தற்போது 20.4 ஓவர்களில் 110 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இலங்கை லெவன் விளையாடி வருகிறது. பசுந்து சூரியபண்டார புதிய வீரராக களம் இறங்கியுள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலேவில் தொடங்கவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு இது மிக முக்கியமான பயிற்சிப் போட்டியாகும். இலங்கை ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்வது என்பது இந்திய பேட்டர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.