📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema June 27, 2026 05:00 PM

இயக்குநர் பாக்யராஜ் மரணம்.. உச்சக்கட்ட அதிர்ச்சி.. அய்யோ.. என்ன ஆச்சு?

இயக்குநர் பாக்யராஜ் மரணம்.. உச்சக்கட்ட அதிர்ச்சி.. அய்யோ.. என்ன ஆச்சு?

சென்னை: இந்திய திரைத்துறையில் திரைக்கதை மன்னர் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். பல ஹிட் படங்களை இயக்கிய அவர் நடிகராகவும் கலக்கியவர். இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர்; தன் குடும்பத்துடன் நிம்மதியாக வசித்துவந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்தவர் பாக்யராஜ். எதுவாக இருந்தாலும் பாக்யராஜைத்தான் பாரதிராஜா அழைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிராஜாவுக்கு பெரிய பலமாகவே திகழ்ந்தவர்களில் இவரும் ஒருவர். அவரிடம் பல வருடங்கள் வேலை கற்றுக்கொண்டு இயக்குநராக மாறினார் பாக்யராஜ். அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின.

பாக்யராஜ் போட்ட விதைகள்: தமிழ் மட்டுமின்றி ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இயக்குநராக ஜொலித்த அவர்; யாருக்கும் எதற்கும் காம்ப்ரமைஸ் ஆகாமல் தனது பாணியில் எடுத்து ஒரு படத்தை ஹிட் கொடுக்கக்கூடியவர்களில் எப்போதுமே இவர் ஸ்பெஷல்தான். இவரிடம் வேலை கற்றவர்கள்தான் பார்த்திபன், லிவிங்ஸ்டன், ஜி.எம். குமார் உள்ளிட்டோர். அவர்கள் இப்போதும் சினிமாவில் நல்ல பெயரோடு இயங்கிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய திரைத்துறையில் திரைக்கதை மன்னன்: பாக்யராஜின் படங்களின் ஸ்பெஷலே அதன் திரைக்கதைதான். அவரது திரைக்கதையை இப்போது பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அலட்டிக்கொள்ளாமல் ரொம்பவே இயல்பாக அவரது சீன்கள் எல்லாம் இருக்கும். மேலும் திரைக்கதையில் மரபுகளையும் உடைத்தவர். அதன் காரணமாக அவரை திரைத்துறையின் திரைக்கதை மன்னன் என கொண்டாடினார்கள். ஹிந்தியில் அவர் படம் எடுத்தபோதுகூட தன்னுடைய ஸ்டைலில்தான் திரைக்கதையை அமைத்தார்.

பாக்யராஜ் பெர்சனல் வாழ்க்கை: அவரது பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை, முதலில் ஒரு திருமணம் நடந்தது. ஆனால் முதல் மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். அதனையடுத்து சில காலம் கழித்து நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்கள்தான் சாந்தனுவும், சரண்யாவும். தன்னை போன்றே தனது வாரிசுகளையும் சினிமாவில் களமிறக்கினார் இயக்குநர். ஆனால் பெரிய வெற்றி அவர்களுக்கு கிடைக்கவில்லை.

உயிரிழந்த பாக்யராஜ்: இவரும் சின்மாவிலிருந்து இப்போது ஒதுங்கியே இருக்கிறார். சூழல் இப்படி இருக்க இன்று அவர் திடீரென உயிரிழந்தார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்போலோ மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றதாகவும் அப்போது உயிர் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இந்த மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.