மேகதாது விவகாரம்; அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டவேண்டும்
வேலூரில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறேன். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டின் நலன்களை முன்னிறுத்தி நல்ல முடிவுகளை எடுக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தால்கூட தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள்.சேலம் மாணவி உட்பட பல மாணவர்கள் ‘நீட்’ தேர்வினால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக உயிரிழந்திருப்பது கவலையளிக்கிறது. தமிழ்நாடு அரசு இதுகுறித்து தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். சட்ட வல்லுனர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் கலந்து பேசி, சட்டப்பூர்வமாக இதனை எதிர்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணவ படுகொலை
சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை
நாடாளுமன்றத்தை போன்று சட்டமன்ற நிகழ்வுகளும் முழுமையாக நேரலை செய்யப்பட வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக முதல்-அமைச்சர் விஜய் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.பா.ஜனதாவில் இருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக கூறி உள்ளார். ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்ட அவர், பா.ஜனதா தலைவர்களின் ஒப்புதலோடு புதிய கட்சியை தொடங்குகிறார்.அண்ணாமலை பா.ஜனதாவின் செயல் திட்டங்களோடுதான், வேறொரு முகமூடியுடன் களம் இறங்குகிறார் என்ற ஐயம் எழுகிறது. அவர் பா.ஜனதா அரசியலை வேறு வடிவத்தில் கொண்டு வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் அதனை எளிதாக அடையாளம் கண்டு நிராகரிப்பார்கள், ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.