📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 16, 2026 03:03 PM

மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை

மேற்கு வங்க முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை

ஆஷிஷ் பானர்ஜி

அந்த மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தூக்கிட்ட நிலையில் அவரது சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டது. நேற்று உள்ளூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அவர், தேசியக் கொடியை ஏற்றி இருந்தார்.

74 வயதான அவர், ராம்பூர்ஹாத் தொகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2001 முதல் 2026 வரையில் சுமார் 25 ஆண்டு காலம் அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவர். கடந்த மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அவர், தோல்வி அடைந்தார். தற்போது அந்த தொகுதியில் பாஜக-வை சேர்ந்த த்ரூபா சாஹா சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

‘பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்’

ஒருவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே அவரை அவதூறாகவும், சமூக ரீதியாகவும் புறக்கணிக்கும் செயலை பாஜக திட்டமிட்டு செய்தது. அதன் விளைவாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான இந்த அரசியல் யுத்தத்தில் மம்தா தலைமையில் நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” என்று குணால் கோஷ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.