முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக-வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார். கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.