📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 29, 2026 11:32 AM

நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் இனி இன்னும் வலிமையாக ஒலிக்கும்

நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரல் இனி இன்னும் வலிமையாக ஒலிக்கும்

புதுடெல்லி,

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தின் உரிமைகள், தமிழ்நாட்டின் குரல் இனி நாடாளுமன்றத்தில் இன்னும் வலிமையாக ஒலிக்கும்.

ஆலோசனை கூட்டம்

இன்று தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதிமந்திரி ப. சிதம்பரம், புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. வைத்திலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சச்சிதானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி. ரவிக்குமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, கார்த்தி ப. சிதம்பரம், விஷ்ணு பிரசாத், ராபர்ட் புரூஸ், சசிகாந்த் செந்தில், சுதா ஆர்., விஜய் வசந்த் கிறிஸ்டோபர் திலக் மற்றும் நானும் கலந்து கொண்டோம்.

ஒருங்கிணைந்த குரல்

தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்சினைகளில், கட்சி வேறுபாடுகளை கடந்து, ஒருங்கிணைந்த குரலாக நாடாளுமன்றத்தில் செயல்படுவது குறித்தும், வருங்கால நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம்.

தமிழ்நாட்டின் உரிமை

ஒருங்கிணைப்பு

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,இந்திய கம்யூனிஸ்ட் ,விசிக ,இயூமுலீ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 28.7.2026 மாலை 4.30 மணியளவில் அறை 62 இல் பழைய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது pic.twitter.com/DsfnivYPPS