📅 Sunday, 21 June 2026 IST | ஆனி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News June 21, 2026 09:31 AM

நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை - விசாரணை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் ரோஷிணி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமக்கல்லில் உள்ள தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இன்று தருமபுரியில் உள்ள நீட் தேர்வு மையத்தில் நீட் தேர்வை எழுத இருந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் ரோஷிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரோஷிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த பாலக்கோடு போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.