பழநி நில மோசடி விவகாரத்தில் மேலும் 2 பேர் சஸ்பெண்ட்
பாலச்சந்தர்
பழநி: பழநி நிலப்பதிவு முறைகேடு விவகாரத்தில் மேலும் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பழநி நில முறைகேடு விவகாரத்தில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். பதிவுத் துறை நடத்திய விசாரணையில், ரூ.100 கோடி நிலத்தை முறைகேடாக பதிவு செய்வதற்கு தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொண்டது பழநி உதவி சார் பதிவாளர் பாலச்சந்தர் மற்றும் அவருக்கு உதவியாக இளநிலை உதவியாளர் சிவசங்கரி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, நேற்று பதிவுத் துறை தலைவர் அருண்சுந்தர் தயாளன் உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்த முறைகேட்டில் சிக்கிய சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், தனது பணிக்காலத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.