📅 Friday, 31 July 2026 IST | ஆடி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 31, 2026 04:33 AM

தென்னிந்தியாவில் கைவரிசை காட்டிய 3 வடமாநில பெண்கள் அதிரடி கைது

தென்னிந்தியாவில் கைவரிசை காட்டிய 3 வடமாநில பெண்கள் அதிரடி கைது

புதுச்சேரி,

தென்னிந்தியாவில் முகாமிட்டு கைவரிசை காட்டிய 'த்ரீரோஸ்' திருட்டு கும்பலான 3 வடமாநில பெண்கள் புதுவை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கொண்ட ஒரு கும்பல், தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது. இவர்களை 'த்ரீ ரோஸ்' திருட்டு கும்பல் என்று போலீசார் பெயர் வைத்தனர். ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அதிகளவில் கைவரிசை காட்டிய இவர்கள், போலீசாரிடம் சிக்காமல் இருக்க அடிக்கடி தங்களது இருப்பிடங்களை மாற்றி வந்தனர். இரு மாநில போலீசாரும் இவர்களைத் தேடி வந்தனர்.

சென்னையில் கைவரிசை

இந்தச் சூழலில், சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள இரண்டு துணிக்கடைகளில் இந்தக் கும்பல் கைவரிசை காட்டிவிட்டுத் தப்பியோடியது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த மாம்பலம் போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் அந்தப் பெண்களின் புகைப்படங்களை வெளியிட்டு தீவிரமாகத் தேடி வந்தனர்.

சிக்கிய கும்பல்

இதற்கிடையே, தேடப்பட்டு வந்த அந்த மூன்று பெண்களும் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இருப்பதாக இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சாதாரண உடையில் ஜவுளிக்கடைக்குள் நுழைந்த போலீசார், அங்கு வாடிக்கையாளர்கள் போல நடித்து நகை திருடத் திட்டமிட்டுக் கொண்டிருந்த மூன்று பேரையும் கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.

ரெயில் மூலம்

தொடர்ந்து பெரியகடை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குஷ்பு (வயது 40), மீனாட்சி (35), லட்சுமி (40) என்பது தெரியவந்தது.