📅 Wednesday, 19 August 2026 IST | ஆவணி 3, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 19, 2026 08:04 PM

3 மாதத்தில் பாலம் இடிந்தது எப்படி..? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

3 மாதத்தில் பாலம் இடிந்தது எப்படி..? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

திமுக ஆட்சியில் கடந்த 2024-ம் ஆண்டு அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் இந்த பாலம் கட்டப்பட்டது. 2024 செப்., 2ம் தேதி தமிழக அமைச்சராக இருந்த எ.வ.வேலு அதனை திறந்து வைத்தார்.

பெஞ்சல் புயல்

இதில், அகரம்பள்ளிப்பட்டு - தொண்டமானூரை இணைக்கும் பாலமும் தப்பவில்லை. ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம், கட்டிய மூன்றே மாதங்களில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளானது. இந்த பாலம் இடிந்து விழுந்ததற்கு, தமிழக அரசு சார்பில் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

அமைச்சர் எ.வ.வேலு

இந்நிலையில் இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது திமுக ஆட்சியில் தரமற்ற முறையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 3 மாதங்களில் இடிந்து விழுந்ததாக அமைச்சர் மரிய வில்சன் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார்.

ஆதவ் அர்ஜுனா