Tamil Nadu
September 03, 2026 03:01 PM
“சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி”
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களுக்கு சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக உள்ளது. வழக்கு தொடர்பான வாதங்கள் தமிழில் இருந்தால் எளிதாக புரியும். இந்த கோரிக்கை எந்த மொழிக்கும் எதிரானது அல்ல.
தமிழ் மொழிக்கான சட்ட அங்கீகாரம் கேட்கும் கோரிக்கை. குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும். இப்பேரவை ஒருமனதாக இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இந்தத் தீர்மானம் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் உரையாற்றிய பின்னர் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu