சிபிஐ, வருமான வரி வழக்கு... உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் என்.ஆனந்த் பதில்
ரிலாக்சா இருக்கிறீர்கள்
அப்போது எழுந்து பேசிய அமைச்சர் ஆனந்த், 'சின்ன வாய்க்கால் பிரச்சினைக்குகூட எங்களை தொடர்பு கொண்டு சரிசெய்து விட்டீர்களா? என்று கேட்கும் முதல்-அமைச்சராகத்தான் எங்கள் முதல்-அமைச்சர் இருக்கிறார். நாங்கள் தினந்தோறும் டென்ஷனோடு தான் இருக்கிறோம். சின்ன விஷயமாக இருந்தாலும் பயத்தோடு அதை அணுகுகிறோம்' என்றார்.
சிபிஐ வழக்கு
இந்த நிலையில், இன்று நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தின்போது எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பேச்சை விமர்சித்து பேசிய தவெக எம்.எல்.ஏ. சுகுமார், “எங்கள் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. நாங்கள் கூலாகதான் இருக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தலுக்காக மக்களை சந்திக்கும் போதும் கூலாகதான் இருப்போம்" என்றார்.
வேறு எந்த அர்த்தமும் இல்லை
எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது நமது முதல்-அமைச்சர் பேசுவார் என்று எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் இப்போது போன் வந்தாலே பயம் இருக்கிறது; தொகுதியில் எதாவது ஒரு சிறிய பிரச்சினை இருந்தால் கூட ஏன் சரிசெய்யவில்லை என கேட்கும் முதல்-அமைச்சர் தான் எங்கள் முதல்-அமைச்சர் என்று பதிலளித்தார்.
அதே எண்ணத்தில்தான் எங்களின் சட்டமன்ற உறுப்பினரும் பேசினார் என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். இவ்வாறு இருவரிடையே விவாதம் நடந்தது.