📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 23, 2026 04:03 PM

IND vs SL: முதல் நாளே இந்திய அணிக்கு அடி.. பாதி பேட்டிங்கில் ரிட்டையர்ட் ஹர்ட் ஆன ரிஷப் பண்ட்

IND vs SL: முதல் நாளே இந்திய அணிக்கு அடி.. பாதி பேட்டிங்கில் ரிட்டையர்ட் ஹர்ட் ஆன ரிஷப் பண்ட்

IND vs SL: முதல் நாளே இந்திய அணிக்கு அடி.. பாதி பேட்டிங்கில் ரிட்டையர்ட் ஹர்ட் ஆன ரிஷப் பண்ட்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 57.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்த போது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரா வீசிய மிகவும் அதிவேகமான ஷார்ட் பிட்ச் பந்தை, ரிஷப் பண்ட் 'புல் ஷாட்' ஆட முயன்றார். அப்போது பந்து அவரது பேட்டில் படாமல், கிளவுஸ் அணிந்திருந்த மணிக்கட்டு எலும்பில் மிக பலமாகத் தாக்கியது. பந்து தாக்கிய வேகத்தில் பண்ட் உடனடியாக வலியால் துடிக்கத் தொடங்கினார்.

இதனால் வலியால் துடித்த ரிஷப் பண்ட்டுக்கு உதவ, இந்திய அணியின் பிசியோ உடனடியாக மைதானத்திற்குள் விரைந்தார். மணிக்கட்டில் வீக்கம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஐஸ் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பிசியோதெரபிஸ்ட் மணிக்கட்டில் டேப் ஒட்டி சிகிச்சை அளிக்க முயன்றார். ஆனால் வலியின் தீவிரம் தாங்க முடியாத அளவிற்கு இருந்ததால் உடனடியாக அந்த டேப் பிரிக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது. இதை அடுத்து அம்பயருடன் பேசிய பிறகு, ரிஷப் பண்ட் காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் தற்காலிகமாக மைதானத்திலிருந்து வெளியேறினார்.

வெளியேறும் போது ரிஷப் பண்ட் 14 பந்துகளைச் சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மறுமுனையில் தேவ்தத் படிக்கல் 135 பந்துகளில் 78 ரன்களுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். பண்ட் வெளியேறியதைத் தொடர்ந்து, இடது கை பேட்ஸ்மேனான ரவீந்திர ஜடேஜா புதிய பேட்ஸ்மேனாகக் களம் இறங்கினார். இந்திய அணி அப்போது 200 ரன்களை தாண்டி இருந்தது.

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் அன்றே காயம் காரணமாகப் பண்ட் வெளியேறியிருப்பது அணிக்குச் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அவரது காயத்தின் தன்மை குறித்து மருத்துவக் குழுவினர் பரிசோதித்து வருகின்றனர். பண்ட் விரைவில் குணமடைந்து மீண்டும் பேட்டிங் செய்ய வர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.