Latest News
August 16, 2026 07:03 PM
காஸ் சிலிண்டர் உண்மை சரிபார்ப்பு பணிக்கு அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில், வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின், இ.கே.ஒய்.சி., எனப்படும் உண்மை சரிபார்ப்பு பணிக்கு, இன்றுடன் அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், வரும், 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் கேஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலி பெட்ரோலியம், எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையில், சமையல் காஸ் சிலிண்டர்களை விற்கின்றன.
சிலிண்டர் வாங்கிய பின், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில், மத்திய அரசின் மானிய தொகை செலுத்தப்படுகிறது. இதற்காக, தமிழகம் உட்பட நாடு முழுதும் சிலிண்டர் பயனாளிகளில் உண்மை சரிபார்ப்பு பணி நடக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
Latest News