📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 29, 2026 11:04 AM

நேபாள பயணத்தில் சோகம்; 30 ஆண்டு அனுபவமிக்க மலையேற்ற டாக்டர் மனைவியுடன் மாயம்

நேபாள பயணத்தில் சோகம்; 30 ஆண்டு அனுபவமிக்க மலையேற்ற டாக்டர் மனைவியுடன் மாயம்

நேபாளம் - திபெத் எல்லைப்பகுதியில் ஏற்ப்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் பயங்கர வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கி உள்ளனர். அதில் 30 ஆண்டு அனுபவமிக்க மலையேற்ற டாக்டர் மனைவியுடன் மாயமாகி உள்ளார்.

நேபாள பயணத்தின்போது மாயம்

மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள மால்பா டொங்ரி பகுதியை சேர்ந்த டாக்டர் கைலாஷ் மானசரோவர் என்பவரும் அவருடைய மனைவியும் யாத்திரைக்காக கடந்த 23-ந்தேதி, 61 பேர் கொண்ட குழுவை நேபாளத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் இருவரும் நேபாள பயணத்தின் போது மாயமாகி உள்ளனர்.

உள்ளூர் மக்கள் அதிர்ச்சி

இத்தகவலை அறியாத அப்பகுதி மக்களும் நோயாளிகளும் செய்தித்தாள் வாயிலாக இதையறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரரும். தீவிர மிதிவண்டி பயண ஆர்வலகுமான இவர் 2005 ம் ஆண்டு புகழ்பெற்ற 'கிரிமித்ரா' விருதை பெற்றுள்ளார். மேலும் ஹில்ஸ் அண்ட் டிரெயில்ஸ்' என்ற சாகச விளையாட்டு நிறுவனத்தை தொடங்கிய இவர் 8.000 மீட்டருக்கு மேல் உள்ள சிகரத்திற்குச் சென்ற நாட்டின் முதல் இந்திய குடிமக்கள் மலையேற்ற குழுவின் டாக்டராக செயல்பட்டவர் ஆவார்.

கஞ்சன்ஜங்கா சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தவர்

23,000 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட கஞ்சன்ஜங்கா சிகரத்தை வெற்றிகரமாக அடைந்துள்ள இவர். 1983ல் மும்பை கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றார்.

1997ம் ஆண்டின் எவரெஸ்ட் மலையேற்றக்குழுவின் ஏற்பாட்டு குழு உறுப்பினராகவும் இருந்த இவர், இமயமலை பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட நடைப்பயணங்களை மேற்கொண்டதோடு, மும்பையில் இருந்து கோவா வரைக்கும், மும்பையில் இருந்து கன்னியாகுமரி வரைக்கும் மிதிவண்டியிலேயே பயணம் செய்துள்ளார்.

சமூகத்திற்கு உதவும் நல்ல எண்ணம் கொண்ட டாக்டர்

இமயமலைக் கழகத்தின் உறுப்பினராகவும், அந்தேரி விளையாட்டு மன்றத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்த இவர், எப்பொழுதும் சமூகத்திற்கு உதவும் நல் எண்ணம் கொண்டவர் ஆவார். அப்பகுதி மக்களுக்குச் சிறந்த முறையில் மருத்துவச் சேவை வழங்கி வந்த இந்தத் தம்பதியினர். பாதுகாப்பாகவும் நலமாகவும் வீடு திரும்ப வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் தீவிரமாகப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.