📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 27, 2026 07:01 PM

பரபரப்பாக நடக்கும் சட்டப்பேரவை.. குறுக்கே இந்த முதல்வர் வந்தால்... இடத்தை மாற்றிய விஜய்...!

பரபரப்பாக நடக்கும் சட்டப்பேரவை.. குறுக்கே இந்த முதல்வர் வந்தால்... இடத்தை மாற்றிய விஜய்...!

பரபரப்பாக நடக்கும் சட்டப்பேரவை.. குறுக்கே இந்த முதல்வர் வந்தால்... இடத்தை மாற்றிய விஜய்...!

பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அவசர ஆலோசனைகளுக்குப் பிறகு பிற்பகலில் சட்டசபைக்கு வந்த முதலமைச்சர் விஜய், தனது பிரத்யேக இருக்கையைத் தவிர்த்து செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா அருகே அமைச்சர்களுடன் அமர்ந்தது கவனம் ஈர்த்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று(ஆகஸ்ட் 27) சமூகநீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதையொட்டி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

முதலமைச்சர் விஜய் வழக்கமாக சட்டப்பேரவை நிகழ்வுகளில் காலை முதலே பங்கேற்பது வழக்கம். ஆனால், இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததால் அவர் காலையில் சட்டப்பேரவைக்கு வரவில்லை.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, காவலர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்றார். இதையடுத்து நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கியிருக்கக்கூடிய தமிழர்களை மீட்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பணிகளை முடித்த பின்னர் பிற்பகலில் சட்டப்பேரவைக்கு வந்த விஜய், அவையில் தனது வழக்கமான இருக்கையில் அமராமல் அமைச்சர்கள் அமரும் பகுதியில் அமர்ந்தார். குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு அருகில் அவர் அமர்ந்திருந்தார்.

அப்போது இருவருடனும் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டபடி அவை நடவடிக்கைகளை விஜய் கவனித்தார். முதலமைச்சருக்காக தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கையைத் தவிர்த்து அமைச்சர்களுடன் அமர்ந்த அவரது இந்த மாற்றம் சட்டப்பேரவை வளாகத்தில் கவனம் பெற்றது.

சட்டப்பேரவை தொடங்கிய நாட்களிலிருந்து முதலமைச்சருக்கான பிரத்யேக இருக்கையை பயன்படுத்தி வந்த நிலையில், இன்று மட்டும் இடம் மாறி அமைச்சர்களுடன் அமர்ந்ததற்கான காரணம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு பேச்சுகள் எழுந்துள்ளன.