📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 04, 2026 02:02 PM

பும்ரா எதிர்காலம் என்ன? பிசிசிஐ நடத்தப் போகும் முக்கிய சோதனை.. 3 வீரர்கள் பங்கேற்பு

பும்ரா எதிர்காலம் என்ன? பிசிசிஐ நடத்தப் போகும் முக்கிய சோதனை.. 3 வீரர்கள் பங்கேற்பு

பும்ரா எதிர்காலம் என்ன? பிசிசிஐ நடத்தப் போகும் முக்கிய சோதனை.. 3 வீரர்கள் பங்கேற்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஜஸ்பிரித் பும்ராவுடன் ஹர்ஷித் ரானா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகிய நான்கு வீரர்களும் பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் செப்டம்பர் 4 முதல் 9 வரை நடைபெறும் பயிற்சிப் போட்டிகளில் விளையாடி தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். வரவிருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்த சோதனை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பல்வேறு காயங்கள் காரணமாக அண்மைக்காலமாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்த இந்த நான்கு வீரர்களும், செப்டம்பர் 13 ஆம் தேதி டெல்லியில் தொடங்க உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பார்கள் என்று பிசிசிஐ-யின் சிறப்பு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

"சிறப்பு மையத்தின் மருத்துவக் குழு கடந்த வாரம் தேர்வுக்குழுவினரிடம் ஒரு அறிக்கையைப் பகிர்ந்து கொண்டது. அதில் இந்த நான்கு வீரர்களும் மருத்துவ ரீதியாக தகுதியுடன் உள்ளனர், ஆனால் போட்டிச் சூழலில் அவர்களின் உடற்தகுதி மதிப்பிடப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக செப்டம்பர் 4 முதல் 9 வரை பயிற்சிப் போட்டிகளை சிறப்பு மையம் ஏற்பாடு செய்துள்ளது" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து காயமடைவது அண்மைக்காலமாக கவலையை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் காரணமாகவே வீரர்களுக்கு காயம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை சிறந்த முறையில் வடிவமைத்து வீரர்களுக்கு போதுமான ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இதற்கிடையில், பும்ராவிற்கு மாற்று பந்துவீச்சாளராக பிரின்ஸ் யாதவ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் போட்டியில் விளையாடி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. எனவே, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவர் சிவப்பு பந்து போட்டியில் விளையாடி தனது உடற்தகுதியை நிரூபிக்க அணி நிர்வாகம் விரும்புகிறது. அவரது முழங்கால் காயம் நீண்ட நேரம் பந்துவீசும் சுமையைத் தாங்குமா என்பதை உறுதி செய்த பின்னரே அவர் டெஸ்ட் போட்டிகளில் களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது.