ஆசிய போட்டி 2026: உங்களுக்கு வசதி வேண்டுமா? நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.. பிசிசிஐக்கு ஜப்பான் பதில்
ஆசிய போட்டி 2026: உங்களுக்கு வசதி வேண்டுமா? நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.. பிசிசிஐக்கு ஜப்பான் பதில்
லாகூர்: இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோரை சேர்த்தது குறித்து தனது தேசிய தேர்வு குழுவிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வு குழு உறுப்பினர்களுக்கு பிசிபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் இமாம் ஆகியோரை பரிந்துரைத்ததற்கான காரணம் மற்றும் அடிப்படை குறித்து விளக்கம் அளிக்குமாறு அதில் கேட்கப்பட்டுள்ளது.
ஆகிப் ஜாவேத், மிஸ்பா-உல்-ஹக் மற்றும் ஆசாத் ஷஃபிக் உள்ளிட்ட தேர்வு குழு உறுப்பினர்கள், வீரர்களின் சமீபத்திய செயல்திறன், தேர்வுக்கான அளவுகோல்கள் மற்றும் பிற காரணங்களை விரிவாகக் குறிப்பிட்டு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் உறுப்பினர்கள் பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில், ஜூன் 2, 2026 அன்று நடைபெற்ற தேர்வு குழுக் கூட்டம் குறித்து குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தின் விவரங்கள் ஜூலை 1 அன்று சமர்ப்பிக்கப்பட்டன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களுக்கான பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் வீரர்களை தேர்வு செய்யும் பணி இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, தேர்வு குழு உறுப்பினர்களின் பரிந்துரையின் பேரில் ரிஸ்வான் மற்றும் இமாம் ஆகியோர் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து பிசிபி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் 194 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.இதையடுத்து, செப்டம்பர் 9ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ரிஸ்வான் மற்றும் இமாம் இருவருமே டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் பெரிய அளவிலான மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் சூழலில், பிசிபி இந்த விளக்கத்தைக் கேட்டுள்ளது.இந்த நோட்டீஸ் வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, அணியில் இருந்து ஏழு வீரர்கள் நீக்கப்படுவதாக வாரியம் அறிவித்தது. ரிஸ்வான் மற்றும் இமாம் ஆகியோருடன் சல்மான் அலி ஆகா, அலி உஸ்மான், ஆமிர் ஜமால், முகமது உவைஸ் ஜாபர் மற்றும் குர்ரம் ஷாஜாத் ஆகியோரும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.