📅 Thursday, 04 June 2026 IST | வைகாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health May 27, 2026 10:32 PM

ஆன்மீகத்தோடு இணையும் மருத்துவச் சேவை: தருமபுர ஆதீனத்தில் பிரம்மாண்ட பல்நோக்கு

ஆன்மீகத்தோடு இணையும் மருத்துவச் சேவை: தருமபுர ஆதீனத்தில் பிரம்மாண்ட பல்நோக்கு

ஆன்மீகத்தோடு இணையும் மருத்துவச் சேவை: தருமபுர ஆதீனத்தில் பிரம்மாண்ட பல்நோக்கு மருத்துவமனை - அடிக்கல் நாட்டுகிறார் சத்குரு மதுசூதனன் சாய்!

ஒரே உலகம் ஒரே குடும்பம்’ உலக மனிதாபிமான இயக்கத்தின் நிறுவனர் சத்குரு ஸ்ரீ மதுசூதனன் சாய் , ஆதீனப் பகுதியில் புதிய மருத்துவமனைக்கான அடிக்கடிகலை நாட்ட உள்ளார்.

மயிலாடுதுறை: ஆன்மீகம், கல்வி, மற்றும் அன்னதானப் பணிகளில் ஒரு மைல்கல்லாக விளங்கும் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம், தற்போது தனது அடுத்த பெரும் பாய்ச்சலாக மருத்துவச் சேவையில் தடம் பதிக்கிறது. 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், ஆதீன மடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இப்பகுதி மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையவுள்ள புதிய மருத்துவமனை குறித்த உற்சாகமான செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய குருமகா சந்நிதானம், "தருமபுரம் ஆதீனத்தின் அடுத்த இலக்கு மருத்துவச் சேவைப் பணிகளைத் துவங்குவதே ஆகும். எனது மணிவிழாவிற்கு வருகை தந்த ‘ஒரே உலகம் ஒரே குடும்பம்’ உலக மனிதாபிமான இயக்கத்தின் நிறுவனர் மற்றும் சத்ய சாய் மனிதவள சிறப்பு பல்கலைக்கழக வேந்தர் சத்குரு ஸ்ரீ மதுசூதனன் சாய் , ஆதீனப் பகுதியில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, வரும் பிப்ரவரி 3-ம் தேதி அன்று மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது," எனத் தெரிவித்தார்.

இந்த மருத்துவமனை வெறும் சிகிச்சை மையமாக மட்டுமல்லாமல், ஒரு பல்நோக்கு மருத்துவமனையாக (Multi-specialty Hospital) உருவெடுக்க உள்ளது. மயிலாடுதுறை மட்டுமின்றி, இதனைச் சுற்றியுள்ள இரண்டு மற்றும் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் உயர் ரக மருத்துவ சிகிச்சையைப் பெறும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக, சத்குரு மதுசூதனன் சாய் பிப்ரவரி 3-ம் தேதி காலை 11 மணியளவில் தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை தர உள்ளார். விழாவைத் தொடர்ந்து மதியம் 3 மணி வரை அவர் ஆதீனத்திலேயே தங்கி, மருத்துவமனைப் பணிகள் மற்றும் எதிர்கால சேவைத் திட்டங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

ஆதீனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிய குருமகா சந்நிதானம்:

"ஆதீனத்தின் கொள்கைப்படி, கோயில்கள் குடமுழுக்கு விழாப் பணிகளை ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளோம். அடுத்த கட்டமாக கல்விச் சேவையைச் சிறப்பாகச் செய்து வருகிறோம். அதனைத் தொடர்ந்து மக்களுக்குத் தடையற்ற உணவு வழங்கும் அன்னதானச் சேவையையும் துவங்கி அது வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வரிசையில் மருத்துவச் சேவையும் தொடங்க வேண்டும் என்பது எமது நீண்ட நாள் விருப்பம்."

இது குறித்துப் பல்வேறு தரப்பினரோடு கலந்தாலோசித்தபோது, சத்குரு மதுசூதனன் சாய் தாமாக முன்வந்து இந்த மனிதாபிமானப் பணியில் தருமபுரம் ஆதீனத்துடன் கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவமனைப் பணிகள் குறித்த காலக்கெடுவை விளக்கிய சுவாமிகள், "அடிக்கல் நாட்டப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் கட்டிடப் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். தேவையான நவீன மருத்துவக் கருவிகள் கொண்டு வரப்பட்டு, விரைவிலேயே மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும். இதற்காக உலகம் முழுவதும் உள்ள சத்குருவின் தொண்டர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து உழைக்க உள்ளனர்," என்றார்.

இந்த மருத்துவமனையின் சிறப்பம்சமே அதன் சேவை மனப்பான்மைதான். இது குறித்துச் சந்நிதானம் கூறியதாவது:

*இலவசச் சேவை: சத்ய சாய் மருத்துவக் கல்லூரியில் படித்து, தற்போது உலகம் முழுவதும் பணியாற்றும் மருத்துவர்கள் இங்கு வந்து சுழற்சி முறையில் தங்களது சேவையை வழங்க உள்ளனர்.

*கிராமங்கள் தத்தெடுப்பு: மருத்துவமனை அமைந்துள்ள சுற்றுவட்டார கிராமங்களை இந்த இயக்கம் தத்தெடுத்து, வீடு தேடிச் சென்று மருத்துவ உதவிகளை வழங்கும்.

*ஆதீனத்தின் பங்களிப்பு: இதற்காகத் தருமபுரம் ஆதீனம் சார்பில் இடம் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற அனைத்துக் கட்டுமான மற்றும் நிர்வாகச் செலவுகளையும் சத்ய சாய் அறக்கட்டளை ஏற்றுக்கொள்கிறது.

* தமிழகத்தில் துவக்கம்: சத்ய சாய் மனிதாபிமான இயக்கம் தமிழகத்தில் தனது முதல் பெரும் மருத்துவச் சேவையைத் தருமபுரம் ஆதீனத்தின் கோரிக்கையை ஏற்று இங்கிருந்து தொடங்குகிறது.

இந்த மருத்துவமனை அமைவதன் மூலம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருத்துவப் புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீகத்தின் துணை கொண்டு மனிதாபிமானம் தழைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் உருவாகும் இந்தத் திட்டம், இப்பகுதி மக்களுக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.