அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான சகோதரரை தாக்கிய வழக்கு: இன்றும் சமரசம் எட்டப்படவில்லை
அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான அவரது சகோதரரை தாக்கிய வழக்கில் இன்றும் சமரசம் எட்டப்படாததால் 5வது முறையாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மரிய வில்சன்
இதுகுறித்து, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் அதன் நகலைப் பெற நேரில் ஆஜராக உத்தரவிட்டபோதும், மரிய வில்சன் தொடர்ந்து நேரில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் கடந்த ஜூலை 10 ஆம் தேதி கட்டாயமாக ஆஜராக வேண்டும் என மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சமரச தீர்வு மையம்
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மரிய வில்சன் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இரு தரப்பிலும் சமாதானம் செய்ய தயாராக இருப்பதால், உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பிரச்சனைக்கு தீர்வு காண உத்தரவிட்டது.
சமரசம் எட்டப்படவில்லை
4வது முறையாக