📅 Saturday, 22 August 2026 IST | ஆவணி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 22, 2026 07:04 PM

`சட்டமன்ற நேரலை பார்த்தோம்; JCD பிரபாகர் சிறப்பு என்றார்'

`சட்டமன்ற நேரலை பார்த்தோம்; JCD பிரபாகர் சிறப்பு என்றார்'

`சட்டமன்ற நேரலை பார்த்தோம்; JCD பிரபாகர் சிறப்பு என்றார்' - ஸ்டாலின் சந்திப்பு குறித்து வைரமுத்து

ஸ்டாலின் - வைரமுத்து சந்திப்பில் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து சுவாரஸ்ய உரையாடல் நடந்தது. சபாநாயகரை இருவரும் பாராட்டிப் பேசிய வைரமுத்துவின் எக்ஸ் பதிவு

நேற்று திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இந்தச் சந்திப்பில் இருவரும் சட்டமன்றம் குறித்துப் பேசிக்கொண்டதைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் வைரமுத்து.

வைரமுத்துவின் பதிவு

"முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நட்பின் நிமித்தமாய் நலம்கேட்கச் சென்றேன்; பொன்னாடை அணிவித்தேன்.

ஞானபீடத்தின் பெருமையறிந்து வீட்டுக்கே வந்து வாழ்த்திய அந்நாள் முதலமைச்சர், பெற்றுவந்த விருதுக்காக மீண்டுமொரு பொன்னாடை அணிவித்தார்.

பொன்னாடைக்குப் பொன்னாடை.

“எதைக் கொடுக்கிறாயோ அதையே பெறுவாய்” என்ற முதுமொழி என் மூளைக்குள் ஓடியது.

ஒருவரை ஒருவர் கொண்டாடிக் கொண்டோம்.

சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை முக்கால் மணிநேரம் இருவரும் கண்டுகொண்டிருந்தோம்.

"ஜே.சி.டி பிரபாகர் சிறப்பாக நடத்துகிறார் சட்டமன்றத்தை" என்றார் தி.மு.க தலைவர்.

"சட்டமன்றத்தின் ஆட்ட நாயகன்" என்று சமூக ஊடகங்கள் சபாநாயகரைப் பேசுகின்றன என்றேன்.

"அப்படியா" என்றார்.

ஓர் அழகான காஃபி குடித்து முடித்து வாழ்த்தி விடைகொண்டேன்".

முன்னாள் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களைநட்பின் நிமித்தமாய்நலம்கேட்கச் சென்றேன்;பொன்னாடை அணிவித்தேன்ஞானபீடத்தின் பெருமையறிந்துவீட்டுக்கே வந்து வாழ்த்தியஅந்நாள் முதலமைச்சர்,பெற்றுவந்த விருதுக்காகமீண்டுமொருபொன்னாடை அணிவித்தார்பொன்னாடைக்குப்பொன்னாடை“எதைக்… pic.twitter.com/l1gEd2P486